Followers

Tuesday, October 15, 2013

சோதிடமும் ஆன்மீகமும் பகுதி 2


ணக்கம் ண்பர்களே!

சனியின் நிலையை வைத்து தான் இந்த தீயவிளைவுகளை ஏற்படுத்துவார்கள். கோச்சாரப்படி சனிகிரகம் தீயவை தரும் காலங்களில் இந்த தீயவைகளை அவர்கள் செய்வார்கள். அப்படி என்ன தான் சனியிடம் இருக்கின்றது என்பதைப்பற்றி பார்க்கலாம்.

நம்மை கிரகங்கள் தான் வழிநடத்துகின்றன. இந்த கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனிபகவான் மட்டுமே. சனி பகவான் தான் அனைவரையும் காப்பாற்றுகிறார். ஒருவரை மந்திரத்தால் பாதிப்பு ஏற்படுத்தும்பொழுது சம்பந்தப்பட்ட நபரின் உயிரை வாங்கும் நிலை ஏற்படலாம். இந்த உயிரை உடலில் வைத்து காப்பாற்றிக்கொண்டு இருப்பது சனி. சனி நன்றாக இருககும்பட்சத்தில் அவரிடம் ஒன்றும் செய்யமுடியாது.  

கிரகங்களுக்கு அப்பால் இந்த பிரபஞ்சத்தில் வெளியே மட்டும் தான் கடவுளின் உலகம் இருக்கின்றது. கிரகங்களுக்குள்ளே இருக்கும் ஒரே கடவுள். சனிஸ்வரன் மட்டுமே. கோச்சார ரீரியாக அவர் பாதிப்படைந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு தீயவர்களால் ஆபத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.

சனிபகவான் நன்றாக இருக்கும்பட்சத்தில் ஒரு நபரை மந்திரத்தால் தீங்கு விளைவித்தால் தீயவர்களை சனிபகவான் உண்டு இல்லை என்று செய்துவிடுவார்.இவர் எப்பொழுது பலம் குறைக்கிறார் என்று பார்த்துகொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் தாக்கிவிடுவார்கள்.சனிபகவானின் உதவி நமக்கு எவ்வளவு தேவை பார்த்தீர்களாக.

மீனராசிக்கு ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி இருக்கலாம். மேஷ ராசிக்கு பாதிப்பை தொடங்கி இருக்ககூடும். தமிழ்நாட்டில் அந்தளவுக்கு பெரிய அளவில் செய்வதற்க்கு ஆட்கள் இருக்கின்றார்களாக என்று எனக்கு தெரியவில்லை இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க உங்களுக்கு அறிவுரை தரப்படுகிறது. 

ஒரு ஜாதகத்தில் பல நிலைகளை வைத்து தான் ஒருவருக்கு நல்லதை மற்றும் கெடுதலை செய்யமுடியும். அனைவரும் கிரகங்களின் பிடியில் தான் இருக்கின்றோம். கிரகங்களின் பிடியில் இருந்து தப்பிக்க வழியை ஆன்மீகம் செய்யும். அந்த வழியை பின்பற்றி நல்லவாழ்க்கை வாழவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: