Followers

Friday, October 4, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 45


ணக்கம் ண்பர்களே!
                     இந்த பதிவை திருவனந்தபுரத்தில் இருந்து எழுதுகிறேன். இன்று திருவனந்தபுரத்தில் ஒரு நண்பரை சந்தித்துவிட்டு பத்மநாப சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று சென்றால் தரிசனம் நேரம் முடிந்துவிட்டது. சரி பரவாயில்லை நாங்கள் எங்கு சென்றாலும் ராஜகோபுரத்தை தானே தரிசனம் செய்வோம். அப்படியே என்னையும் தரிசனம் செய் என்று பெருமாள் நினைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். உடனே உங்களிடம் இதனை சொல்லிவிடவேண்டும் என்று நினைத்து இதனை தந்துவிட்டேன்.

ராகு தசாவில் சுக்கிரன் புத்தியை பற்றி பார்த்து வருகிறோம். அப்படி பார்த்து வரும்பொழுது இதில் ஒரு மிகப்பெரிய விசயத்தை சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இப்பொழுது சொல்ல மனது இடம் தந்துவிட்டது. ராகு தசாவுக்கு கலைதுறைக்கும் நன்றாக இருக்கும். அதில் சுக்கிரனின் புத்தி கலைதுறையில் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டுவிடும்.

ஒரு சில சினிமா கதாநாயகர்களை பார்த்தால் தெரியும். முதலில் மூன்று படங்கள் நன்றாக கொடுப்பார்கள் அதன் பிறகு ஏதோ வந்தோம் சென்றோம் என்று நடித்துக்கொண்டு இருப்பார்கள். அது எல்லாம் இந்த புத்தி காலங்களில் நடைபெறும் ஒரு செயல் மட்டுமே. சுக்கிரனின் புத்தி காலங்களில் அவர்களை நன்றாக தூக்கிவிடும். அந்த தூக்கிவிடும் காலம் அவர்களை காலங்காலமாக அவர்களுக்கு நற்பெயரை தந்துவிடும். கலைதுறையில் சாதித்த நபர்களுக்கு அனைவரின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் அவர்களுக்கு இந்த காலத்தில் மட்டுமே நடந்து இருக்கும்.

ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டால் அவர்களுக்கு இந்த காலத்தில் சினிமாவில் வாய்ப்பை தேடி அலைந்து திரிவார்கள் ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு வராது. ஒரு சிலரிடம் கேட்டாலே சொல்லுவார்கள் நானும் மூன்று வருடங்கள் வாய்ப்பை தேடிப்பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை அதனால் விட்டுவிட்டேன் என்று சொல்லுவார்கள் அவர்களுக்கு எல்லாம் ராகு தசாவில் சுக்கிரன் கெட்டு தசா நடைபெறும் காலங்களில் மட்டுமே.

நாளை சென்னை வந்துவிடுவேன். தொடர்ந்து உங்களுக்கு நிறைய பதிவை தரஉள்ளேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

KJ said...

Sir, for sivaji ragu dasa was very good it seems. Can u explain the reason, tht wher ragu placed in his horo. I don't have his horo.

rajeshsubbu said...

வணக்கம் KJ அவர்களே வரும்காலங்களில் ஏகாப்பட்ட ஜாதகங்களை வைத்து சொல்லிதருகிறேன். அப்பொழுது பார்க்கலாம்.