Followers

Tuesday, October 15, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 51


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் ஒவ்வொரு புத்தியாக பார்த்து வருகிறோம். இந்த ராகுதசாவில் ஒரு புதிய செய்தியை சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். அதனை இப்பதிவில் பார்த்துவிடலாம்.

ஒருவருக்கு ராகு தசா நடைபெறும் காலங்களில் சம்பந்தப்பட்ட நபர் எந்த ஒரு முடிவும் எடுக்கமுடியாமல் திணறுவார்கள். பேசும்பொழுது பார்த்தால் அவர்கள் எந்த விதத்திலும் ஏற்றுக்கொண்டு முடிவுக்கு வரமாட்டார்கள். பார்க்கலாம். பேசலாம் என்று மட்டுமே வார்த்தை வருமே தவிர இன்றைக்கு முடிக்கலாம் என்று சொல்லமாட்டார்கள்.

காரியத்தை தள்ளிவைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். முடிவை ஏன் எடுக்கமாட்டார்கள் என்றால் அந்த முடிவால் நம்மை பாதிக்கும்படியாக நடந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைப்பார்கள். வியாபாரத்தில் இருக்கும் ராகு நட்சத்திரக்காரர்கள் கூட இப்படி தான் நடப்பார்கள். ஏன் டா இவரிடம் மாட்டினோம் என்று நினைக்க தோன்றும். அப்படி ஒரு இழுத்து அடிப்பார்கள்.

அனைவரையும் சந்தேகத்தோடு பார்க்கும் குணம் வந்துவிடும். சந்தேகத்தோடு இருக்கும்பொழுது எப்படி முடிவு எடுக்கும் நிலை ஏற்படும். இதனாலேயே இவர்களுக்கு வரும் நல்லவாய்ப்பை தவறவிட்டுவிடுவார்கள்.

ராகுதசா நடைபெற்றால் உங்களுக்கு நம்பிக்கை உடையவர்களாக இருந்தால் அவர்களிடம் கேட்டு ஆலோசனை செய்து முடிவை எடுத்துக்கொள்ளுவது நலம்பயக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: