Followers

Wednesday, October 16, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 53


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவில் செவ்வாய் புத்தியைப்பற்றி பார்த்து வருகிறோம். செவ்வாய் நன்றாக இருந்து புத்தி நடந்தால் என்ன பலன் என்பதை பார்த்தோம் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

நான்காவது வீட்டில் செவ்வாய் இருந்தால் சொந்தமாக நிலங்கள் வாங்குவீர்கள். புதிய வீடு கட்டுவீர்கள். தாயாரின் சொந்தங்கள் வழியாக உங்களுக்கு நல்லது நடைபெறும்.கூட்டுதொழில் தொடங்குவீர்கள். கூட்டுத்தொழிலில் செய்துக்கொண்டு இருந்தார்களுக்கு லாபம் தரும் விதமாக நடக்கும். அதிகமான பணம் செலவு செய்து புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள்.

நண்பர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். இன்று நண்பர்கள் செய்யும் உதவியால் தான் பலபேர் முன்னேற்றம் அடைக்கின்றனர். நண்பர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். செய்கின்ற தொழிலில் நல்ல லாபத்தை பார்க்கலாம்.

ஐந்தாவது வீட்டில் செவ்வாய் இருந்தால் விளையாட்டு துறையில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் வழியாக சிறப்பு வந்து சேரும். திடீர் யோகம் சகோதர்கள் வழியில் கிடைக்கும்.

முன்னோர்கள் வழியில் உள்ள சொத்து உங்களுக்கு உயில் வழியாக வந்து சேரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். முருகன் கோவிலுக்கு செல்வீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் சுபசெலவையும் ஏற்படுத்துவார்.

ஆறாவது வீட்டில் செவ்வாய் இருந்தால் எதிரிகள் உங்களுக்கு அடிபணிவார்கள். நீங்கள் செய்யும் வேலையில் மனஈடுபாட்டோடு செய்வீர்கள். நீங்கள் தொழில் செய்துக்கொண்டு இருந்தால் உங்களுக்கு வேலையாட்கள் நன்றாக அமைவார்கள். இன்றைய காலகட்டத்தில் நல்ல வேலையாட்கள் கிடைப்பது கடினம். இந்த நேரத்தில் உங்களுக்கு வேலையாட்கள் கிடைப்பார்கள்.

ஊரில் உள்ளவர்கள் உங்களை மதிப்பார்கள். தந்தையாரின் உதவி உங்களுக்கு கிடைக்கும். புண்ணியஸ்தலயாத்திரை சென்றுவருவீர்கள். உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்தவித நோய்யும் உங்களை அண்டாது. புத்துணர்வோடு இருக்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: