Followers

Thursday, October 17, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 55


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம் அதில் செவ்வாய் கிரகம் நன்றாக இருந்து புத்தி நடைபெற்றால் என்ன பலன் என்பதை தொடர்ச்சியாக பார்க்கலாம்.

செவ்வாய் பத்தாவது வீட்டில் இருந்தால் அதிகமான மூதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். பெரிய தொழிற்சாலை அமைக்கும் யோகம் வரும். தொழில் தொடங்க திடீர் உதவி கிடைக்கும். வேலை செய்துக்கொண்டிருந்தால் நீங்கள் செய்யும் வேலையில் உங்களின் மேல் அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள்.

பணவரவு திக்குமுக்காட வைக்கும். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அப்புறம் பணம் வந்தால் எந்த குடும்பத்தில் தான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும்.விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்று தரும் மற்றும் பங்கு வர்த்தகம் நல்ல பணவரவை பெற்று தரும்.

செவ்வாய் பதினோராவது வீட்டில் இருந்தால் தொழிலில் லாபம் தரும். தொட்டகாரியங்கள் வெற்றி தரும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். புதியதாக நண்பர்கள் வட்டாரம் உருவாகும். அண்ணன்கள் வழியில் உள்ள நண்பர்கள் உதவுவார்கள்.

செவ்வாய் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்தால் உங்களின் குழந்தைகளுக்கு திருமண ஏற்பாடு செய்வீர்கள் அல்லது குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு விசேஷம் செய்வீர்கள். அயல்நாட்டிற்க்கு போகும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு பணிமாற்றம் அடைந்து அயல்நாட்டிற்க்கு செல்ல நேரிடும். சொகுசு வாழக்கையை வாழவைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: