Followers

Friday, October 18, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 56


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி வந்தோம். ராகு தசாவில் செவ்வாய் புத்தியை பற்றி பார்த்து வந்தோம். செவ்வாய் கெடுதல் தரும் நிலையில் இருந்தால் என்ன பலன் தரும் என்பதை பார்ப்போம்.

தலையில் அடிப்படும். உடலில் இருந்து இரத்தம் கொஞ்சமாவது வெளியேறும். சகோதர்கள் வழியில் பிரச்சினை ஏற்படுத்திவிடுவார். மனதில் பயம் அதிகமாக இருக்கும். நெருப்பால் புண் ஏற்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படுத்திக்கொண்டே இருப்பார். நிம்மதி இருக்காது.

பக்கத்தில் இருப்பவர்கள் அதாவது பக்கத்துவீட்டு காரர்கள் பிரச்சினை ஏற்படுத்தியிருப்பார். காதில் இரத்தம் வந்து அதற்கு மருத்துவனையில் இருக்க வைப்பார்.

தாயாருக்கு கண்டத்தை ஏற்படுத்துவார். வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் நாசம் ஏற்படும்.வாகனங்கள் கோளாற்றை ஏற்படுத்துவார். குழந்தைகள் பிரச்சினையை ஏற்படுத்துவார்கள்.

எதிரிகள் தொல்லை தருவார்கள். நோய் தலைதூக்கும். துணைவர்க்கு பிரச்சினை கொடுக்கும். அறுவைச்சிகிச்சை கூட செய்ய வேண்டிவரும். பயணங்களில் கசப்பான அனுபவம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும்.

அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும். வாகனங்களி்ல் செல்லும்பொழுது எச்சரிக்கையோடு செல்வது நல்லது. பூர்வீகசொத்து வில்லங்கத்தை ஏற்படுத்தும். தந்தை வழியில் உள்ள உறவினர்கள் பிரச்சினை கொடுப்பார்கள். ஊரில் மரியாதை கிடைக்காது. தொட்டகாரியங்கள் வெற்றி பெறாது. 

தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். நண்பர்கள் எதிரிகளாக மாறுவார்கள்.சுகவாழ்வுக்கு பிற பெண்களை நாடுவீர்கள். மருத்துவமனையில் சிகிச்சை மேற்க்கொள்ள வேண்டிவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: