Followers

Saturday, October 26, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 61


வணக்கம் நண்பர்களே!
                    ராகுதசாவை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம். இந்த ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். இவருக்கு ராகு தசா இளமையிலேயே வந்துவிட்டது. ராகுவின் பாதிப்பு இவரின் குடும்பத்தை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கியது. 

மிதுனராசியை கொண்டவர். துலாம் லக்கினத்தை உடையவர். லக்கினத்தில் நான்கு கிரகங்கள் இருக்கின்றன.எப்பொழுது ஒரு ஜாதகத்தில் மூன்று கிரகங்களுக்கு மேல் இருக்கின்றதோ அந்த ஜாதகர் பாடு பெரும் பாடாக அமையும். இவருக்கு நான்கு கிரகங்கள் அமைந்துள்ளன.குரு கிரகம் உச்சம் பெற்றாலும் அவரோடு மாந்தி கிரகம் அமைந்துள்ளது. சனிக்கிரகம் சிம்மத்தில் அமர்ந்துள்ளது.

சனிக்கிரகம் உச்சவீட்டை பார்த்தாலும் பார்க்கும் வீட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் வேறு அமர்ந்துள்ளார்கள். அடுத்தது ஒன்றை நாம் கவனிக்கவேண்டும்.சுகஸ்தானம் என்னும் நான்காம் வீடு. இந்த வீடு மட்டும் நன்றாக இருந்தால் போதும். எப்படியும் அடுத்தவர்கள் கொடுத்தாவது நாம் முன்னேற்றம் அடைந்துவிடலாம். 

இந்த நான்காவது வீடு கெடும்பொழுது அனைத்து சுகத்தையும் நாம் இழந்துவிடவேண்டும்.இவருக்கு சுகஸ்தானம் கெட்டுவிட்டது என்றே சொல்லலாம்.குருவின் பார்வை இருந்தாலும் நீசவீட்டை தான் பார்க்கிறது. குரு மாந்தியோடு சேர்ந்ததால் குருவால் பலனை தரமுடியவில்லை.

நாம் பார்க்கவேண்டிய இடத்திற்க்கு வந்துவிடலாம். ராகு இந்த ஜாதகருக்கு பனிரெண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கார். ராகு பனிரெண்டாவது வீட்டில் அமர்நதால் என்ன நடக்கும். போகம் தூக்கம் செலவு இவற்றை காட்டும் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சின்ன பையன் என்பதால் போகத்திற்க்கு வேலை இல்லை. மீதி இருக்கும் அனைத்திற்க்கும் வேலையை செய்யும் என்று சொல்லலாம்.

ராகு தசாவில் அதிகமான வறுமையை குடும்பத்திற்க்கு கொடுத்துவிட்டது. செலவு அதிகமானதால் வறுமையை அதிகம் கொடுத்தது. இவரின் தந்தைக்கு உடல்நிலை பிரச்சினை என்பதால் அவரின் மருத்துவமனை செலவே அதிகம் வைத்திருக்கிறது.


இந்த பையனுக்கு ராகு தசா ஆரம்பித்ததில் இருந்து இவரின் தந்தைக்கு உடல்நிலையில் பிரச்சினை ஏற்பட்டது. ராகு தசாவில் ஒன்றைச்சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன் மறந்துவிட்டேன் இப்பொழுது அதனை பார்க்கலாம். ஒருவருக்கு ராகு தசா நடைபெற்றால் அவருடைய தந்தை அல்லது தாயை இழக்க நேரிடும். ராகு தசா நடக்கும்பொழுத நடக்கும் நபரை தனியாக பிரித்து வைப்பது நலம். 

ராகுவே அதிகபட்சம் பிரித்து அனுப்பிவிடுவார். ஒரு சில கிரகநிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே தங்கவைத்துவிடுவார் அப்பொழுது தந்தை அல்லது தாயை இழக்க நேரிடும். இந்த பையனுக்கு ராகு தசாவின் சூரிய புத்தியில் தந்தை மரணம் அடைந்தார். 

உங்களுக்கு அப்பா, அம்மா இறந்து இருந்தார்கள் என்றால் உங்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் ராகு தசா நடைபெறற காலங்களில் அது நடந்து இருக்கும். ராகு தசா நடைபெறும்பொழுது சம்பந்தப்பட்ட நபர் வெளியில் சென்றுவிடவேண்டும். குடும்பத்தை விட்டு வெளியில் சென்றுவிடவேண்டும். சிலருக்கு வெளியில் கிளம்ப தயாராக இருப்பார்கள் அந்த நேரம் பார்த்து ராகு அப்பா அல்லது அம்மாவை கொன்றுவிடும்.

கிராமங்களாக இருந்தால் உங்களின் வீட்டில் மாடு அல்லது ஆடு இவற்றை பலிவாங்கும். ராகு தசா நடைபெறும் பொழுது இப்படி நடைபெறும்.சரி நண்பர்களே அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

4 comments:

கார்த்திக் சரவணன் said...

வணக்கம், எனக்கு ராகு தசை தொடங்கியது ஜூன் 97இல், ஜூலை மாதம் நான் வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். தாங்கள் சொல்வது சரியாகவே இருக்கிறது...

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Unknown said...

மிக சரியாக சொன்னிர்கள். எனது ராகு திசையில் என் அப்பா இரந்தார்

Unknown said...

மிக சரியாக சொன்னிர்கள் அய்யா.