Followers

Tuesday, October 1, 2013

நீங்களும் யோககாரர்கள்


வணக்கம் நண்பர்களே!
                    உங்களின் ஜாதகத்தில் யோகம் என்பதை இல்லாமல் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் ஒரு நன்மையும் நடைபெறவில்லை என்று நீங்கள் கவலைப்பட்டால் அதற்கு ஒரு வழி இருக்கின்றது.

உங்களை உங்களின் குலதெய்வத்திற்க்கு தத்து கொடுத்துவிடுங்கள். அப்படி தத்து கொடுத்துவிட்டால் உங்களுக்கு யோகம் வரும். தத்துக்கொடுக்கவேண்டும் என்றால் அந்தந்த குலதெய்வத்தின் உள்ள குருக்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

தத்துக்கொடுப்பது என்றால் நீங்கள் அந்த கோவிலுக்கு சொந்தமானவர் என்று பொருள். அந்த கோவிலுக்கு உங்களை எழுதிக்கொடுத்துவிட்டார்கள் என்று அர்த்தம்.உங்களுக்கு திருமணத்தின் போது உங்களை திரும்பிபெறவேண்டும். அதனையும் அந்த கோவில் உள்ள குருக்கள் செய்வார்கள்.

ஒரு சில வீட்டில் மூன்று குழந்தைகள் இருப்பார்கள் அப்படி இருக்கும்பொழுது ஒரு குழந்தையை இப்படி கோவிலுக்கு எழுதிவைப்பார்கள்.மூன்று குழந்தைகள் இருந்தால் குடும்பத்திற்க்கு ஆகாது என்று எழுதிவைப்பார்கள். 

கோவிலுக்கு தத்து கொடுத்துவிட்டால் உங்களின் பெயருக்கு அர்ச்சணை செய்யகூடாது. சாமியின் பெயருக்கே அர்ச்சனண செய்யப்படவேண்டும். இது பொதுவாக குலதெய்வத்திற்க்கு தத்துக்கொடுப்பார்கள். உங்களுக்கு பிடித்த கோவில்களிலும் தத்து கொடுக்கலாம். 

தத்துகொடுப்பதால் உங்களின் ஜாதகத்தில் உள்ள குறைகள் நீக்கி நல்வாழ்வை உங்களின் குலதெய்வம் பெற்று தரும்.நீங்களும் யோகக்காரர்களாக உடனே மாறுங்கள்.
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Anonymous said...

நல்ல ஆலோசனை தான் . இதே ஆலோசனை ஒரு சாமியார் மூலம்
எங்களுக்கு மிகச் சமீபமாக வழங்கப்பட்டது.குழந்தைகளை
எத்தனை வயது வரையில் தத்து கொடுக்கலாம் ?
நாமே நம்மை தத்து கொடுத்துக் கொள்ளலாமா ?
நன்றி !