Followers

Friday, October 11, 2013

நவராத்திரி சிறப்பு பதிவு


ணக்கம் ண்பர்களே !
                    நவராத்திரி சிறப்பு பதிவில் சென்னை காளிகாம்பாள் கோவிலை பற்றி பார்க்கலாம்.

நான் அதிகமாக கோவிலுக்கு செல்வதில்லை. அதற்கு காரணம் அம்மன் நம்மிடம் வரும்பொழுது அங்கு எல்லாம் செல்லகூடாது என்பதால் மட்டுமே. சென்னையில் இருந்து தொழில் செய்வதால் சென்னையை காக்கும் தெய்வமான காளிகாம்பாள் கோவிலுக்கு மட்டும் செல்வது உண்டு.

அடிக்கடி நேரம் கிடைக்கும்பொழுது செல்வது உண்டு. இந்த அம்மனை பற்றி ஏற்கனவே பலமுறை சொல்லியுள்ளேன். உங்களின் வேண்டுதல் கண்டிப்பாக நடத்திக்கொடுக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமையில் வழிப்பட்டு வருவது நல்லது. கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபபட்டு வந்தால் எந்தவிதமான மனக்குறை இருந்தாலும் தீர்த்து வைக்கும் அம்மன் காளிகாம்பாள்.

சென்னையில் தொழில் செய்பவர்கள். சென்னையில் தங்கி வேலை பார்ப்பவர்கள் சென்று வணங்கி வருவது நல்லது. நான் சென்னை வந்த நாள் முதல் வழிப்பட்டு வருகின்றேன். அதனால் தான் அம்மன் என்னை வெளியூர் சென்று தங்கவிடாமல் சென்னையிலேயே பிழைத்துக்கொள் என்று என்னை வைத்திருக்கிறது.

காளிகாம்பாள் கோவில் சென்று ஒவ்வொரு சந்நிதியாக வழிப்பட்டு வாருங்கள். நிறைய சந்நிதி அங்கு உள்ளது. உங்களுக்கு தேவையானது அங்கு கிடைக்கும் என்பதால் சொல்லுகிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: