Followers

Wednesday, October 16, 2013

அம்மன் தியானம்


வணக்கம் நண்பர்களே!
                    அம்மனை வைத்து அடுத்தவர்களுக்கு நல்லது செய்தாலும் அம்மன் இஷ்டம்போல் தான் செய்ய வைப்பேன். அது எப்பொழுது முடித்துக்கொடுக்கிறதோ அப்பொழுது முடிக்கட்டும் என்று விட்டுவிடுவேன்.

இப்பொழுது நிறைய பிரச்சினைகள் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். அதனை எல்லாம் ஒவ்வொன்றாக அதுவாகவே செய்துக்கொடுத்துக்கொண்டு வரும். அனைத்தையும் இன்றைய தேதிக்குள் முடிக்கவேண்டும் என்று நினைத்துவிட்டால் ஒரு நாள் என்ன செய்வேன் என்றால் முழு நேரம் தியானத்தில் அமர்ந்துவிடுவேன். அதிகப்பட்சமாக இரவில் தான் அமருவேன்.

இரவு முழுவதும் அமர்ந்துவிட்டால் அனைத்து வேலையும் பறந்து நடத்திக்கொடுக்கும். எனக்கு எந்தவிதத்திலும் கஷ்டத்தை கொடுத்துவிடாது. இரவு முழுவதும் ஏன் அமர்கிறாய் என்று உடனே அனைத்து காரியத்தையும் செய்துக்கொடுத்துவிடும். அம்மனிடம் வேலை உடனே காரியம் சாதிக்க இது தான் வழியாக எனக்கு இருக்கும்.

பகலிலும் அமர்ந்து தியானம் செய்வது உண்டு ஆனால் இப்பொழுது அதிகவேலை காரணமாக இரவில் அதிகம் உட்காருவது உண்டு. இந்த மாதிரி தியான செய்து வேலை வாங்குவதை குரு தான் சொல்லிக்கொடுத்தார்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வேலை வாங்குவார்கள். நான் இந்த முறையில் பின்பற்றுவது உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: