Followers

Monday, October 21, 2013

கேள்வி & பதில்


Sudhagar V N said...
ஆச்சர்யமான தகவல்கள் தங்களின் வலைதளத்தில் தொடர்ந்து அணிவகுக்கின்றன. வாழ்த்துகள்.
பொது வாழ்க்கைக்கு பயன்படும் சில மூலிகைகள் பற்றி கூறினால் வாசகர்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே.
நன்றி!

வணக்கம் இன்றைய காலகட்டத்தில் நெட்டில் தேடிபார்த்தால் கிடைக்காத மூலிகைகளே கிடையாது. இதில வேறு நான் தனியாக எழுதி உங்களை போட்டு குழப்பவேண்டுமா? அனைத்தும் நெட்டில் கிடைக்கும். மூலிகைகள் பயன்படுத்தாமல் எந்த ஒரு ஆன்மீகம் கிடையாது. 

இந்தியாவில் இருக்கும் ஆன்மீகத்தின் சக்தியே மூலிகையை சார்ந்தது தான் இருக்கின்றது. நாம் கோவில் சாமி கும்பிடுகிறோம் கும்பிட்டவுடன் அவர்கள் தீர்த்த நீரை பருகிகிறோம் சிலையின் அடியில் இருக்கும் அஷ்டமருந்தில் பட்டு தான் அபிஷேகநீர் வெளியில் வருகின்றது. அந்த அபிஷேக நீரை எடுத்து தலையில் தெளித்துக்கொள்கிறோம் இது எல்லாம் மூலிகை கலந்த நீர் தான். மூலிகை இல்லாமல் ஆன்மீகம் கிடையாது. 

எந்த மூலிகையும் பயன்படுத்தும் விதத்தில் தான் அதன் சக்தி இருக்கின்றது. ஒவ்வொரு மூலிகையும் பயன்படுத்தும் விதத்தை குரு தான் நிர்ணயம் செய்கிறார்கள். சாதாரணமாக மூலிகையை சுத்தி செய்து தான் எடுப்பார்கள். ஒவ்வொரு மூலிகைக்கும் இத்தனை நாள் என்று கணக்கு இருக்கின்றது. இன்றைய காலகட்டததில் ஒரு செடிக்கு மஞ்சள் தண்ணீரை தெளித்து விட்டு சென்றால் அடுத்த நாள் வந்து சென்று பார்த்தால் அந்த செடியே இருக்காது எவராவது பிடிங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

எனது குரு சுத்தி செய்வது எல்லாம் கிடையாது. அப்படியே அவரின் கைப்பட்டு எடுத்துவிட்டால் அது சுத்தி அடைந்துவிடும். சக்தி படைத்த ஆள்களின் நிலை அப்படிப்பட்டது. மூலிகை இல்லாமல் ஆன்மீகம் கிடையாது குருவை பொருத்து மூலிகையை பயன்படுத்தும் விதம் மாறும்.

இன்று நெட்டில் அனைத்தும் கிடைக்கிறது. தேடிபாருங்கள்.ஒருவன் ஆன்மீகத்தை முழுவதும் கற்கவேண்டும் என்றால் அவன் பனிரெண்டு வருடம் ஆன்மீகப்பயிற்சி பெறவேண்டும் அப்பொழுது மட்டுமே அனைத்தும் முழுமைபெறும். ஏன் பனிரெண்டு வருடம் தெரியுமா? பயிற்சிக்கு பனிரெண்டு வருடம் என்று வைத்திருப்பார்கள். காலச்சக்கரத்தில் ஒவ்வொரு ராசியாக குரு அமர்ந்து ஒரு சுற்று சுற்றி முடித்தால் மட்டுமே அவனால் முழுமை பெறமுடியும்.

வாழைப்பழத்தின் தோலை வைத்து கிரகத்தை மாற்றுவிடுவேன். இதனை நீங்கள் நம்பமுடிகிறதா? உண்மை அது தான். மந்திரம் மற்றும் வாழைப்பழத்தின் தோலைக்கொண்டு ஒரு கிரகத்தின் தன்மையை அப்படியே மாற்றிவிடுவோம். 

இப்படி ஏகாப்பட்ட பொருட்கள் வைத்திருக்கிறோம். அதனை எல்லாம் எனக்கு ஒரு சிஷ்யன் வருவான் அவனுக்கு மட்டும் தான் கொடுக்கமுடியும். அனைவருக்கும் கொடுக்கச்சொல்லி எனது குரு கட்டளை இடவில்லை. அதனால் அனைத்தும் மறைக்கப்படுகிறது.ஒரு குருவை நீங்கள் அடைந்துவிட்டால் போதும் அனைத்தும் உங்களுக்கு வசப்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: