Followers

Wednesday, October 16, 2013

பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    எந்த ஒரு பரிகாரமும் சம்பந்தப்பட்ட நபர்களை முதலில் செய்ய சொல்லுவது எனது வாடிக்கை. ஏன் என்றால் அவர்கள் செய்யும் பூஜையிலேயே ஒரு சில பிரச்சினை நிவர்த்தியாகும். அப்பொழுது அவர்களுக்கு பணம் சேமிக்கமுடியும் என்பதால் இதனை முதலில் பரிந்துரை செய்வோம்.

நாங்கள் அம்மன் மற்றைய தெய்வங்களை வைத்து செய்துக்கொடுத்தாலும் முதலில் கிரகங்களுக்கு சாந்தி பரிகாரம் செய்யசொல்லுவோம். கிரகங்களுக்கு செய்யாமல் எதுவும் நம்மால் செய்யமுடியாது. கிரங்கள் தன் வேலையை செய்துக்கொண்டே இருக்கும் அதனை சாந்தப்படுத்தி அடுத்த நடவடிக்கை செய்யவேண்டும். கிரகங்களுக்கு செய்யாமல் அம்மனை வைத்து செய்தாலும் எதனை வைத்து செய்தாலும் சிறிய காலத்திலேயே பிரச்சினை மறுபடியும் ஆரம்பித்துவிடும்.

எந்த ஒரு செயல் வெற்றி அடைய வேண்டும் என்றாலும் அவர்களின் ஜாதகத்தை வைத்து நாம் செய்கின்ற காரியங்களால் மட்டுமே வெற்றி அடையமுடியும். ஜாதகத்தை வைத்துக்கொண்டு அந்த கிரகங்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று வழி செய்வது மட்டுமே எங்களின் வேலையாக இருக்கும். இதனை எல்லாம் செய்வது என்பது தொடர் வெற்றியை பார்க்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு செய்துக்கொடுப்போம்.

அவர்கள் அனைவரும் எங்களை சார்ந்து இருப்பவர்களாக இருப்பார்கள். இதனுள் தான் இப்பொழுது வியாபாரம் செய்துக்கொண்டு இருப்பவர்கள் மற்றும் திரைதுறையினர் அரசியல்வாதிகள் வருவார்கள். இப்பொழுது பல பேர் இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் நெருங்காதா அளவுக்கு செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றேன். இதில் இருப்பவர்கள் அனைவரும் நல்ல முன்னேற்றத்தை கொடுத்துக்கொண்டு இருக்கின்றேன்.எந்த நிலையிலும் அவர்களுக்கு இழப்பு என்பது இல்லாமல் செய்துதருகிறோம்.

நீங்கள் அனைவரும் சோதிடர்களாக தான் இருப்பீர்கள். நீங்களும் பிறர்க்கு செய்யும்பொழுது இது மாதிரி செய்துக்கொடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: