Followers

Sunday, October 27, 2013

விதியின் விளையாட்டு


வணக்கம் நண்பர்களே!
                    ஒருத்தருக்கு நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து தான் நினைக்கிறோம் ஆனால் அவர்களின் விதி அவர்களை தடுக்கிறது. என்னிடம் வந்து சார் அப்படி பிரச்சினை இப்படி பிரச்சினை என்று முதல் தடவை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். சரி இப்பொழுது தானே முதலில் வந்துள்ளார்கள் முதலில் அவர்களே ஏதாவது பரிகாரம் செய்யட்டும் என்று பரிகாரத்தை சொல்லி அனுப்புவது வாடிக்கை.

அவர்கள் பரிகாரம் செய்கிறார்களா என்று பார்த்தால் அதனையும் செய்வதில்லை சரி மறுபடியும் நம்மை தேடி வரட்டும் அவர்களுக்கு நாமே ஏதாவது நன்மை செய்துவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு இருப்பேன். ஆனால் அவர்கள் வருவதில்லை.  

அவர்களின் விதி அப்படி அவர்களை திசை திருப்புகிறது. இப்பொழுது அதிகப்பட்சமான பேருக்கு சோதிடம் தெரிகிறது. வரும் பிரச்சினையை தீர்ப்பதற்க்கு வழி தெரியவில்லை. சரி பிரச்சினை தீர்க்கும் சோதிடரையாவது நீங்கள் கையில் வைத்திருக்கவேண்டும். உங்களுக்கு சரியாக செய்யக்கூடிய சோதிடர்களை நீங்கள் மாதம் ஒருமுறையாவது தொடர்புக்கொண்டு உங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வது நல்லது. 

அவர்களிடம் நீங்கள் பணம்கட்டி தான் பார்க்கவேண்டும் என்பது கிடையாது. சும்மா ஒரு போன் போட்டு பேசினாலே போதும் அவர்களே உங்களுக்கு கெடுதல் நேரம் இருந்தால் சொல்லிவிடுவார்கள்.

சோதிடர்களிடம் உள்ள பழக்கம் அவர்களின் வாய் சும்மா இருக்காது நீங்கள் இந்த ராசியா இந்த மாதம் புதன் சரியில்லை. சந்திரன் சரியில்லை என்று சொல்லிவிடுவார்கள். இந்த பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லிவிடுவார்கள்.

உங்களை காப்பாற்றுவதற்க்கு ஆன்மீகவாதி தயாராக தான் இருப்பார்கள். விதியின் விளையாட்டால் அவர்களிடம் நீங்கள் செல்வதை விரும்பமாட்டீர்கள். எப்படியும் நான் முன்னேற்றம் அடைந்தே தீரவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக எவ்வளவு இன்னல் வந்தாலும் சந்தித்தே தீருவேன் என்று முடிவோடு தொடர்பை வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: