Followers

Monday, October 28, 2013

நீங்களும் பணக்காரர் ஆகலாம் !


ணக்கம் ண்பர்களே!
                    பல பேர் பிறந்த நாள் கஷ்டத்திலேயே இருந்துக்கொண்டு வந்திருப்பார்கள். இப்பொழுதும் அதே கஷ்டத்தை அனுபவித்து வருவார்கள். இவர்களுக்கு ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இருக்கும். சரி கஷ்டப்பட்டுக்கொண்டே தான் இவர்கள் கடைசி வரை வாழவேண்டும் என்றால் கண்டிப்பாக இல்லை. 

எப்படிப்பட்ட ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகமாவது நன்மையளிக்கும். அதனை கண்டுபிடித்து அதனை சரிசெய்யவேண்டும். இந்த வழி அனைவருக்கும் சரிப்பட்டு வரவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்றால் ஆன்மீகவாதியாக மாறிவிடுவது நல்லது. 

ஆன்மீகவாதியாக வேண்டும் என்றால் நீங்கள் பெரிய அளவில் ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என்பது கிடையாது. தினமும் வீட்டில் பூஜை செய்வது. பூஜை அறையில் அமர்ந்து ஒரு பத்து நிமிடம் அமர்ந்து கடவுளிடம் உங்களின் கோரிக்கையை வைத்தாலே போதும் அது நடந்துவிடும். உங்களுக்கு செல்வம் வரவேண்டிய காலத்தில் கொட்டிக்கொடுத்துவிடும். கடவுள் செல்வத்தை தரவேண்டும் என்று மட்டும் நினைப்பார். எவ்வளவு செல்வம் வேண்டும் என்பதை நமது வழிபாடு தான் தீர்மானிக்கும்.

நீங்கள் கடவுளிடம் வேண்டும்பொழுது கூட அது உடனே நடைபெறவில்லை என்றாலும் பரவாயில்லை வழிப்பாட்டை நிறுத்தகூடாது. நீங்கள் செய்யும் வழிபாடு உங்களுக்கு செல்வம் வரும் நேரத்தில் கொட்டிக்கொடுத்துவிடும். நமக்கு வரும் பணம் லட்சமா அல்லது கோடி என்று தீர்மானிப்பது உங்களின் வழிப்பாட்டில் தான் உள்ளது.

பல பணக்காரர்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பூஜை செய்துக்கொண்டே இருப்பார்கள். எதற்காக செய்கிறார்கள் என்று கூட தெரியாது ஆனால் பூஜை அடிக்கடி நடைபெற்றுக்கொண்டு இருக்கும். இந்த பூஜை தான் அவர்களை தாங்கிக்கொண்டிருக்கும் தூண்கள். ஒவ்வொரு பணக்காரர்களுக்கும் பின்னாடி ஆன்மீகவாதி கண்டிப்பாக இருப்பார்கள். அவர்கள் தான் அவர்களின் தலைவிதியை நிர்ணிப்பவர்களாக இருக்கிறார்கள்.

நீங்களும் பணக்காரர்களாக ஆகவேண்டும் என்றால் உடனே நான் சொன்ன இந்த எளிய முறையை பின்பற்றினாலே போதும்.நீங்களும் பணக்காரர் தான்.உடனே நீங்கள் ஆரம்பித்துவிடுவது நல்லது. திராவிடம் எல்லாம் பேசாமல் உடனே ஆரம்பிப்பது நல்லது. என்ன செய்வீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: