Followers

Thursday, October 17, 2013

யந்திரம்


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர்கள் யந்திரம் எழுதிதாருங்கள் என்று கேட்கிறார்கள். யந்திரம் எல்லாம் நான் எழுதுவது கிடையாது. ஒரு சிலர் யந்திரத்தில் தெய்வசக்தியை உருவேற்றி தருவார்கள். நம்மிடம் இருப்பது ஒரு சக்தி மட்டுமே அதனை அப்படியே உருவேற்றி தந்துவிட்டால் அப்புறும் நான் எங்கு செல்வது அதற்க்கு தான் நான் உருஏற்றி தருவது கிடையாது.

ஒரு சில இடங்களில் செய்து தருவதாக கேள்விப்பட்டு இருக்கின்றேன். ஒரு யந்திரத்தை தயார் செய்வதற்க்கே பல வேலைகள் இருக்கின்றன. அதனை செய்து தருவதற்க்கு எனக்கு நேரமும் கிடையாது.பல கடைகளில் நான் பார்த்து இருக்கின்றேன். ஒரு சில கடைகளில் மட்டும் இந்த யந்திரங்கள் நல்ல சக்தியோடு இருக்கின்றது. 

பல கடைகளில தகடு போல் தான் இருக்கின்றது எந்த விதத்திலும் பயன் தராமல் தான் இருந்துக்கொண்டு இருக்கின்றது. இப்பொழுது பல யந்திரங்கள் பிரிண்டு செய்து வருகின்றது. மெஷின் பிரிண்டு செய்து வருவதில் ஒன்றும் பயன் தராது.

மனிதர்கள் தன் கையில் எழுதி தரவேண்டும். அவர்களின் ஆத்மாவின் வழியாக சக்தியை அந்த யந்திரத்தில் ஏற்றவேண்டும்.அப்பொழுது மட்டுமே அந்த யந்திரத்திற்க்கு சக்தி இருக்கும்.

யந்திரங்கள் பல நாட்கள் பூஜையில் வைத்து உரு ஏற்றவேண்டும்.அப்படி உரு ஏற்றும் பொழுது அந்த யந்திரத்திற்க்கு அதிக சக்தி கிடைக்கும். கடைகளில் விற்க்கும் யந்திரத்தை வாங்கி பயன்படுத்தாதீர்கள். அதில் எதுவும் இருக்காது. அது வெறும் தகடு மட்டுமே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: