Followers

Sunday, October 13, 2013

காலம் கடந்து ஞானம்


ணக்கம் ண்பர்களே!
நேற்று ஒரு நண்பர் திருச்சியில் இருந்து வந்து என்னை சந்தித்து பேசினார். அவருக்கு விருச்சிக ராசி என்று சொன்னார். பரிகாரம் இது வரை செய்யவில்லை என்று சொல்லிருந்தார். பிரச்சினை வந்துவிட்டது. பிரச்சினை வந்ததால் என்னை சந்தித்து பேசினார்.

நமது பதிவில் ஏற்கனவே இந்தந்த ராசியினர் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு செய்ய வேண்டும் என்று சொல்லிருந்தேன். பதிவில் சொல்லுவது எதற்க்காக என்றால் நீங்கள் விளிப்போடு உடனே செய்துவிடுவீர்கள் என்பதால் மட்டுமே சொல்லுகிறேன்.

நீங்கள் பதிவை சும்மா படிப்பதோடு இல்லாமல் உங்களின் தேவைக்கு பரிகாரத்தை உடனே செய்துவிடவேண்டும். பிரச்சினை வருவதற்க்கு முன்பு செய்தால் மட்டுமே பிரச்சினையில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் வந்த பிறகு ஒன்றும் செய்யமுடியாது.

பிரச்சினை வந்தபிறகு சோதிடர்களை சந்தித்தால் ஆயிரக்கணக்கான பணத்தை கேட்பார்கள். ஏன் தேவையில்லாமல் பணத்தை செலவு செய்ய வேண்டும். உங்களால் வெண்ணைகாப்பு செய்யமுடியவில்லை என்றால் பத்து ரூபாய்க்கு வெற்றிலை வாங்குங்கள் அதனை கட்டிக்கொண்டு அதனை ஆஞ்சநேயருக்கு சாத்தும்பொழுது உங்களின் பிரச்சினை முடிவடையும்.

பணத்தை பொருத்து நாமே பரிகாரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். முடிந்தவரை நீங்களே பரிகாரம் செய்துக்கொள்வது நல்லது. என்ன அலுப்பு பார்க்காமல் உடனே செய்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் உடல் உழைப்பு இருந்தால் போதும்.

பதிவில் எழுதுவது உங்களை தற்காத்துக்கொள்வதற்க்கு மட்டுமே. உங்களின் நலனில் அக்கறை இருந்தால் எந்த ஒரு விசயத்தையும் காலம் தாழ்த்தாமல் உடனே செய்துவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: