Followers

Tuesday, October 15, 2013

எனது திட்டம்


வணக்கம் நண்பர்களே !
                    பல பேர் என்னிடம் கேட்பார்கள் சார் உங்களோடு அடுத்த திட்டம் என்ன செய்யபோகின்றீர்களா. இப்படியே சந்நியாசியாக போகின்றீர்களா அல்லது வேறு ஏதாவது செய்யபோகின்றீர்களா என்ற கேள்வியை அதிகம் பேர் கேட்கிறார்கள்.

இதனை செய்யவேண்டும் என்று எந்த திட்டமும் என்னிடம் இல்லை எனக்கு தெரிந்த என்னுடைய அனுபவத்தில் இருந்து எடுத்த கருத்துக்களை இந்த பதிவில் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். பல மகான்கள் ஆன்மீகத்தைப்பற்றி அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை அவர்களின் வழியில் சொல்லியுள்ளார்கள். ஒரு சாதாரண மனிதனாக இருந்துக்கொண்டு என்னுடைய ஆன்மீகதாகம் எப்படி இருந்தது அதனால் எதனை நான் பெற்றேன் என்பதை உங்களோடு பகிர்ந்துக்கொண்டு வருகிறேன்.

நான் ஆன்மீகத்தில் சாதிப்பதை விட என்னால் பல சாதாரண மனிதர்களுக்கு நல்லது செய்ய முடிகிறது. என்னாலும் அவர்களை காப்பாற்றமுடிகிறது என்ற சந்தோஷம் இப்பிறவி எடுத்த பூண்ணியத்தை நான் அடைந்துவிட்டேன். ஒரு சில காலங்களில் வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிக்கும் காலங்களில் நமக்கும் உபயோகம் இல்லாமல் அடுத்தவர்களுக்கும் உபயோகம் இல்லாமல் வாழ்கின்றோமே என்று நினைத்து இருந்தேன். ஆனால் இன்று பல பேர்களுக்கு நல்லது செய்யும்பொழுது புரிகிறது.

எனக்குள் என்ன நடக்கிறதோ அதனை அப்படியே சொல்லுகிறேன். அதனை படித்தால் உங்களுக்குள் மாற்றம் வந்தால் அதுவே எனக்கு போதும். கஷ்டம் என்று வருபவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்தாலே போதும். அடுத்த இலக்கு கடவுள் விட்ட வழி என்று இருப்பது தான் எனது நோக்கம்.

கடவுளை அடைய வேண்டும் என்ற நோக்கம் என்பது எல்லாம் கிடையாது.பிற மனிதனுக்கு உதவவேண்டும். இப்பொழுது ஆன்மீகவழியில் மட்டுமே உதவமுடியும் அதனை செய்து கொடுத்தால் போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: