Followers

Wednesday, October 16, 2013

ஆத்மாவிற்க்கு அமைதியை தரும் இடம்


வணக்கம் நண்பர்களே!
                    நமது அம்மன் அமைந்த இடத்தைப்பற்றி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தேன். அதனை பார்த்து பல நண்பர்கள் படம் எடுத்தவரை பாராட்டினார்கள். அவரிடமும் நான் சொல்லிவிட்டேன். விநாயகர் மட்டும் போட்டோ எடுக்காமல் விட்டுவிட்டோம் அடுத்தமுறை போட்டோ எடுத்து போட்டுவிடுகிறோம்.

முதன் முதலில் நமது ஜாதககதம்பத்தில் இருந்து நமது அம்மன் இருக்கும் கோவிலுக்கு நண்பர்கள் வந்தார். அவர்களுக்கு நன்றி. நண்பர் செந்தில்குமார் மற்றும் ராமசுப்பிரமணியன் அவர்கள் தான் வந்திருந்தார்கள். நண்பர் செந்தில்குமார் அவர்கள் இன்று என்னிடம் பேசும்பொழுது அந்த இடம் மனதிற்க்கு அமைதியாக இருக்கின்றது என்று சொல்லிருந்தார். 

அங்குள்ள அம்மனின் சக்தியை எடுத்து தான் உங்களுக்கு தந்துக்கொண்டு இருக்கின்றேன். அந்த அமைதியில் பலநாட்கள் இருந்து தான் இதனை எல்லாம் எடுத்துவந்து உங்களுக்கு தருகிறேன். நான் சொன்னது போல் வாழ்க்கையில் ஒருமுறை நீங்கள் அந்த இடத்திற்க்கு வாருங்கள். அங்கு நிலவும் அமைதியில் இருந்து பாருங்கள். என்னால் அதனை விளக்கமுடியாது அதனை நீங்கள் உணரும்பொழுது நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

முதலில் அங்கு வரும்பொழுது ஒன்றும் தெரியாது போல் இருக்கும். ஆனால் அங்கு வந்துவிட்டால் உங்களுக்கு தெரியும் மறுபடியும் அங்கு செல்லவேண்டும் என்று நினைக்க தோன்றும்.

நீங்கள் சாமி எல்லாம் கும்பிடவேண்டியதில்லை நமது ஆத்மா இளைப்பாறுவதற்க்கு ஒரு இடம் தேவை என்று எல்லோரும் அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அங்கு வந்தால் அதுவாகவே இளைப்பாறுவதை உணரமுடியும்.

எத்தனையோ புண்ணியஸ்தலங்களுக்கு சென்று இருக்கலாம். மகான்கள் இருக்கும் இடத்திற்க்கு சென்று இருக்கலாம் இந்த இடத்திற்க்கு வாருங்கள். அப்பொழுது மட்டும் தெரியும் வாழ்நாட்களில் இத்தனை நாட்கள் வீணாக கடத்திவிட்டோமே என்று தோன்றும்.சக்தியை உணருவதற்க்கு வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: