Followers

Saturday, October 19, 2013

அம்மனின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                         ஒரு செயலில் இறங்கி அதனை வெற்றி பெறவைப்பது என்பது ஆன்மீகத்தில் கேள்விக்குறியாக தான் இருக்கும். இப்பொழுது அம்மனின் செயலால் அதிகபட்சமான காரியங்கள் வெற்றி பெற்றுவருகின்றன. இன்னும் கொஞ்சம் காலத்தில் இறங்கிய செயல் தோல்வி என்பதே இல்லை என்ற நிலை ஏற்பட வைக்கமுடியும். இப்பொழுது எடுக்கின்ற செயல் 90 சதவீதம் முடித்துக்கொடுத்துவிடுகிறது. மீதி இருக்கும் பத்து சதவீதம் வரும் நபர்களின் குளறுபடிகளால் தான் நடக்காமல் இருக்கின்றது. 

தொழில் செய்பவர்களுக்கும் இப்படி தான் நடத்திக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றேன். இப்பொழுது அதிகமாக ஜாதக கதம்பம் வழியாக வரும் நபர்களை தேர்ந்தெடுத்து நான் கற்ற ஆன்மீகம் துணைக்கொண்டு முன்னேற்றம் கொடுத்து கொண்டிருக்கிறேன். நான் கற்ற ஆன்மீக விசயங்கள் முழுவதும் இதுவரை முழுமையாக பயன்படுத்தவில்லை.

அதற்கென்று சரியான ஆட்கள் வரவில்லை. ஜாதக கதம்பம் வழியாகவே அவர்கள் வருவார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. பார்க்கலாம். ஜாதககதம்பம் வழியாக பல பேர் மிக உயர்ந்த இடத்திற்க்கு செல்வார்கள். அனைத்தும் அம்மனின் செயல் மட்டுமே.

வரும் நாட்களில் இன்னமும் வித்தியாசமான முறையில் ஆன்மீகத்தின் துணைக்கொண்டு ஜாதககதம்பத்திற்க்கு வரும் நபர்களை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். அம்மனின் செயலால் எப்படி போகின்றது என்று பார்க்கலாம்.

நாளை பாண்டிச்சேரியில் என்னை சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: