Followers

Sunday, October 27, 2013

அம்மனின் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    நமது அம்மனிடம் வேண்டுதல் வைத்து அது நடத்திக்கொடுத்து இருக்கும். அப்படி நடத்திக்கொடுத்திருப்பவர்கள் தங்களது காணிக்கையை எனது வங்கி கணக்கில் செலுத்தலாம். வரும் தீபாவளிக்கு பூஜை செய்யலாம் என்று கடந்த மாதம் சொல்லிருந்தேன ஆனால் பல காரணங்களால் அதனை மாற்றியமைத்து இருக்கிறேன். அடுத்த மாதம் பத்து தேதிக்குள் நடத்தப்படும். தீபாவளி முடிந்து முதல் வாரத்தில் வைக்கிறேன். ஏன் என்றால் சில நண்பர்கள் பூஜைக்கு வருகிறேன் என்று சொன்னதால் மாற்றியமைத்துள்ளேன்.

நீங்கள் நல்ல நிலைமைக்கு வந்தால் கோவிலுக்கு வாருங்கள் சும்மா கடன் வாங்கிக்கொண்டு எல்லாம் வராதீர்கள். வேண்டுதலை வையுங்கள். அம்மன் உங்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து தரும் அதன் பிறகு கோவிலுக்கு வரலாம்.

ஏதோ சம்பாதிக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் சம்பாதித்துவிட்டு நான் சம்பாதித்துவிட்டேன் என்று வரவேண்டாம். சொந்த காரில் வரவேண்டும் என்று நினையுங்கள். அது தான் வளர்ச்சியின் அடையாளம்.அம்மன் உங்களுக்கு அந்தளவுக்கு உதவி செய்யும்.

வேண்டுதல் வைத்து நடந்து முடிந்தவர்கள் உங்களால் முடிந்த தொகையை அனுப்புங்கள். பணம் அனுப்பமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. பூஜை தேதியை விரைவில் அறிவிக்கிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: