Followers

Wednesday, December 25, 2013

ஆன்மீக அனுபவங்கள் 143


வணக்கம் நண்பர்களே!
                    சக்தி வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளமான மக்கள் இருக்கின்றனர். இந்த சக்தி வைத்து அவர்களின் பிரச்சினை தீர்க்கவேண்டும் என்பதற்க்காக இதனை கேட்கிறார்கள். தன் பிரச்சினை மட்டுமே நினைப்பவர்களுக்கு எப்படி சக்தி கிடைக்கும். பிறமனிதர்களையும் நாம் நம்மவர் போல் பார்த்தால் மட்டுமே ஒரு சக்தி நமக்கு கிடைக்கும்.

எங்கேயே இருந்து ஒரு சாமியார் வந்து சும்மா அடையாரில் உட்கார்ந்துக்கொண்டிருப்பவனுக்கு கொடுக்கிறார் என்றால் அந்த சாமியார் ஒன்றும் முட்டாள் கிடையாது. இவன் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பான் என்று அனைத்தையும் தெரிந்துக்கொண்டு தான் செய்வான்.

தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களின் மீது கூட நல்ல அன்பை வைக்கமாட்டேன்கிறார்கள் இந்த காலத்து மக்கள். இவர்கள் எப்படி அடுத்தவர் மீது அன்பை செலுத்தமுடியும். மக்களின் மீது அதிகமாக அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள் ஞானிகள். எந்த ஒரு மனிதன் மீது வெறுப்பை காட்டகூடாது என்பார்கள். அடுத்தவனையும் தன்னைபோல் நடத்தவேண்டும் என்று நினைப்பார்கள்.

ஒருவருக்கு அடுத்தவர் மீது அன்பை செலுத்த முடியும் என்றால் கண்டிப்பாக உங்களை தேடி ஒரு மகான் வந்து கொடுத்துவிட்டு செல்வார். நீங்கள் தேடிச்செல்ல வேண்டியதில்லை. அவர்களே உங்களை தேடி வருவார்கள்.

இந்த காலத்தில் சொந்த குடும்பத்தில் அன்பை செலுத்தமுடியாமல் பல மக்கள் இருக்கின்றனர். இவர்கள் எப்படி அடுத்தவர்கள் மீது அன்பு செலுத்தமுடியும். அடுத்தவர்கள் மீது அன்பை எந்தவித நோக்கமும் இல்லாமல் செலுத்தினேன். ஒரு மகான் வந்து அற்புதமான பொக்கிஷத்தை தந்துவிட்டார். நீங்களும் அன்பை செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். உங்களை தேடிவரும்.

எல்லோருடனும் நன்றாக பழகுவேன். அந்த பழக்கம் இன்று பல விதத்தில் எனக்கு கைகொடுத்தது. பல பேர்களின் இதயத்தில் நாம் வாழகற்றுக்கொள்ளவேண்டும். அது தான் உண்மையான சொத்து.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: