Followers

Friday, December 27, 2013

ஆன்மீக அனுபவங்கள் 144


ணக்கம் ண்பர்களே!
                    பிரச்சினையும் தீர்வும் ஆரம்பித்து முதல் பதிவில் சொல்லிருந்தேன் எப்படிப்பட்ட கர்மா வந்தாலும் அதனை எதிர்த்து போராட வேண்டும் என்று சொன்னேன். முதல நாளிலேயே அது என்னை பதம் பார்த்துவிட்டது. சரி விடுங்கள் என்ன செய்தாலும் மக்களுக்கு நன்மை செய்வதில்  ஆயிரம் தடைகள் வந்தாலும் கொடுக்கவேண்டியதை கொடுத்துவிடுவோம்.

ஒரு ஆன்மீகவாதிக்கு உடலிலும் மனதிலும் விஷம் என்பது ஏறக்கூடாது. உடலில் ஏறினாலும் மனதில் ஏறினாலும் சக்தி நம்மிடம் வராது. அதனை எடுக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே நாம் ஆன்மீகவாதியாக இருக்கமுடியும். தலைவலி மாத்திரை உடலில் விஷமாக மாறியது தான் பிரச்சினை. அதனை எடுத்துவிடவேண்டும். 

குரு நாதர் கொடுக்கும்பொழுதே மனதில் விஷமம் இருக்கின்றதா என்று பார்த்து தான் கொடுப்பார்கள். உடலில் விஷம் இருந்தால் அதனை எளிதில் எடுத்துவிடலாம். மனதில் விஷம் என்பது இருக்ககூடாது. அதனை போக்கிவிட்டு தான் அனைத்தும் நமக்கு ஏறும்.

மனதில் விஷம் இருந்தால் குரு கொடுக்ககூடிய விசத்தை வைத்து அனைத்தையும் செய்துவிடலாம். பாதிக்கப்படுவது மக்களாக இருப்பார்கள் அல்லவா. அதனால் அது இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தனக்கு என்ன தேவையோ அதனை நிறைவேற்றிக்கொள்ளலாம் ஆனால் அதனால் பிறர் பிரச்சினையில் மாட்டக்கூடாது. நல்ல விசயங்களாக மக்கள் வந்தால் உடனே செய்துவிடு என்பார். நானும் அப்படிதான் செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: