Followers

Saturday, December 28, 2013

ஆன்மீக அனுபவங்கள் 145



வணக்கம் நண்பர்களே!
                    நான் இருக்கும் பகுதியில் மின்தடை. இன்று நாம ரெடி ஆனாலும் இன்று கூடுதலாக ஒரு நாள் ஒய்வு எடுத்துக்கொள் என்று இறைவனின் செயல். வெளியில் ஒரு பிரவுசிங் சென்டரில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அனைத்து மக்களும் தன்னுடைய சக்திக்கு மீறி ஒரு சக்தி தேவைப்படுகிறது. அந்த தேடுதல் காரணமாக தான் மனிதன் திருமணம் செய்துக்கொள்கிறான். தன்னுடைய சக்தி இல்லாமல் கூடுதல் ஒரு சக்தி தேவைப்படும் என்று நினைத்து திருமணம் செய்கிறான்.  அனைவருக்கும் திருமணத்தின் வழியாக சக்தி கிடைத்தால் அதனை வைத்து காலத்தை ஒட்டிவிட்டு போய் சேர்ந்துவிடுவான்.

ஒருவருக்கு வரும் மனைவி சக்தியாக வரவேண்டும். அவனை இயக்கும் சக்தியாக வரவேண்டும். அப்படி வந்துவிட்டால் நீங்கள் எந்த வித சக்தியும் எடுக்கவேண்டியதில்லை.பெண்ணின் சக்தி உங்களது உடலில் பரவி அதுவே மிகப்பெரிய சக்தியாக விளங்கிவிடும். திருமணம் செய்தவர்கள் அனைத்திலும் சாதிப்பது இந்த சக்தி மாற்றத்தில் மட்டுமே. 

மனிதன் கடைசிவரை ஒடி அனைத்தையும் செய்துக்கொண்டிருப்பதற்க்கு பின்புலத்தில் இருந்து இந்த சக்தி உங்களுக்கு கிடைக்கிறது. அதனால் வேறு சக்தியை(அம்மனை) தேடிச் சென்று போகவேண்டியதில்லை. திருமணம் வழியாக வரும் சக்தியை பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடையுங்கள்.

நன்றி நண்பர்களே !


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: