Followers

Sunday, December 15, 2013

குரு தசா பலன்கள் பகுதி 19


ணக்கம் ண்பர்களே!
                    குருகிரகம் ஆறாவது வீட்டில் நின்று குரு தசா நடைபெற்றால் எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை இப்பதிவில் நான் பார்க்கலாம்.

குரு கிரகம் நன்றாக இருந்து தசா நடைபெறும்பொழுது என்ன மாதிரியான பலனை தரும் என்பதை பார்க்கலாம்.

மறைவு ஸ்தானத்தில் குரு கிரகம் இருந்தாலும் நன்மைகளையும் செய்யும். சக்திவாய்ந்த மந்திரங்களை பயில்வார்கள் அல்லது தன்னோடு மிகப்பெரிய சக்தியை வைத்திருப்பார்கள். நல்ல வேலை கிடைக்கும் அதுவும் பணம் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்வதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

எதிரிகள் இல்லாமல் இருக்கும். எதிரிகள் அனைவரும் சாதுவாக மாறிவிடுவார்கள். சாப்பிடும் உணவு உடனே ஜீரணமாகும். அளவான சாப்பாட்டை சாப்பிடுவார்கள். உங்களின் பிள்ளைகளின் வருமானம் உயரும்.

ஆறாவது வீட்டில் இருந்து குரு ஐந்தாவது பார்வையாக பத்தாவது வீட்டை பார்ப்பதால் செய்கின்ற வேலையில் இருந்த தடங்கல்கள் எல்லாம் விலகும். நீங்கள் பார்க்கும் வேலையில் பதவி உயர்வுக்கூட கிடைக்கும்.

ஆறாவது வீட்டில் இருந்து இரண்டாவது வீட்டை ஒன்பதாவது பார்வையால் பார்ப்பதால் பணவரவு நன்றாக இருக்கும். தனவீடு அல்லவா. பணம் வந்துக்கொண்டே இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குடும்பத்தில் புதிய நபர் உருவாகுவார்.

குரு கிரகம் ஆறாவது வீட்டில் கெட்டு அமர்ந்தால் மேலே சொன்ன நற்பலன்களுக்கு எதிராக நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: