Followers

Sunday, December 15, 2013

குரு தசா பலன்கள் பகுதி 21


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் ஏழாவது வீட்டைப்பற்றி சொன்னவுடன் உடனே நண்பர்கள் அனைவரும் எனக்கு போன் செய்து என்ன சார் மரணம் வரும் என்று சொல்லுகிறீர்களே என்று கேட்டார்கள்.

மரணத்தைக் கண்டு அவ்வளவு பயமாக இருக்கின்றது. மரணத்தை வைத்து தான் ஆன்மீக வாழ்வே தொடங்குகிறது. குரு ஏழில் இருந்து தசா நடைபெறும்பொழுது அதனை கண்டு பயப்படதான் வைப்பார் அப்பொழுது தானே மரணம் இல்லா வாழ்வைப்பற்றி நீங்கள் சிந்திப்பீர்கள். 

மனிதன் மரணத்தைப்பற்றி பயப்படுகிறானோ இல்லையோ அவர்களின் துணையை கண்டு பயப்படத்தான் வேண்டும்.மனைவி வந்த வழியிலேயே மரணமும் நமக்கு வரும். ஏழாவது வீடு என்பது முதலில் கொல்லும்வீடாக தான் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தான் மீதி உள்ள வீடுகள். 

மனிதனை கொல்லும் வீட்டின் தசா நடைபெறுவதால் மனிதன் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. தகுந்த தேவையான பரிகாரங்களை செய்துக்கொள்வது நல்லது.

உங்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தவாறு பரிகாரத்தை மேற்க்கொண்டுவிடுங்கள். குரு க்கு மட்டும் செய்தால் போதாது. உங்களின் ஜாதகத்தில் பார்த்து தான் இந்த பரிகாரம் செய்துக்கொள்ள வேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: