Followers

Monday, December 16, 2013

குரு தசா பலன்கள் பகுதி 24


ணக்கம் ண்பர்களே!
                    குரு கிரகம் ஒன்பதாவது வீட்டில் நின்று குரு தசா நடைபெற்றால் எப்படி பலன் தரும் என்பதை பார்க்கலாம்.

குரு கிரகம் நன்றாக இருந்து தசா நடைபெறும்பொழுது எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை பார்க்கலாம்

பாக்கியஸ்தானம் அல்லவா. ஒருவர் செய்ய போகும் நற்பணிகள் ஆன்மீக ஈடுபாடு ஆகியவற்றை காட்டும் இடத்தில் இருந்து குரு கிரகம் தசா நடத்தும்பொழுது இவற்றில் அதிகமாக ஈடுபடுவார். நாம் எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா அல்லது தோல்வியில் முடியுமா என்பது நாம் முன் ஜென்மத்தில் செய்த பாக்கியம் இந்த ஜென்மத்திற்க்கு கிடைக்கும் அல்லவா அதில் குரு இருந்து தசா நடத்துவதால் அனைத்திலும் வெற்றி பெறுவார்.

நமது தந்தை வழியில் உள்ளவர்கள் செய்த நல்ல செயல்கள் எல்லாம் காட்டும் இடம் அல்லவா. அவர்களின் வழியிலும் நன்மையை குரு தசா நமக்கு கொடுக்கும். தந்தையின் உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.

குரு கிரகம் ஐந்தாவது பார்வையாக லக்கினத்தை பார்க்கும் நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு நமது உடல்நிலை நன்றாக இருக்கவேண்டும் அல்லவா. நமது உடலில் லட்சுமி வாசம் இருக்கும். எப்படி வாசம் இருக்கும் என்று கேட்கவேண்டாம். உடலில் ஒரு மச்சம் அளவாது அதிர்ஷ்டம் வேண்டும் அபபொழுது தான் அனைத்தும் கிடைக்கும். அப்படி ஒரு நிலையை குரு ஏற்படுத்துவார்.

குரு கிரகம் ஒன்பதாவது பார்வையாக பூர்வபுண்ணியத்தை பார்த்துவிடுகிறார் அல்லவா அப்புறம் என்ன முன்ஜென்மத்தில் செய்த நல்ல புண்ணியங்கள் எல்லாம் அணிவகுத்து நிற்கும். தொட்டது துலங்கும்.

குரு கிரகம் கெட்டு தசா நடந்தால் கொஞ்சம் பிரச்சினை அதிகமாக வரும்.சாப்பாட்டிற்க்கு கூட கஷ்டம் வரச்செய்யும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: