Followers

Thursday, December 19, 2013

குரு தசா பலன்கள் பகுதி 28


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில நாட்களாக குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு கிரகம் ஒவ்வொரு வீடுகளாக நின்று தசா நடைபெற்றால் என்ன என்பதைப்பற்றி பார்த்தோம். இந்த வீடுகளை வைத்து நீங்கள் பலனை பார்த்தாலே சரியாக தான் வரும்.

குரு தசாவில் குரு கிரகம் மட்டும் பலனை தருவதில்லை ஒவ்வொரு கிரகங்களும் புத்திகள் என்று உள்ளே வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கிரகத்தின் புத்தியிலும் அதன் அதன் தாக்கம் இருக்கதான் செய்யும். அப்படி ஒவ்வொரு கிரகத்தின் புத்தி என்ன என்ன பலனை தரும் என்பதைப்பற்றி இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.

ஒரு தசா நடைபெறும்பொழுது அந்த அனைத்து புத்தியும் பலனை தரும் என்பதை சொல்லமுடியாது. ஒவ்வொரு கிரகமும் நன்றாக இருந்தால் அதன் புத்தி ஒரளவு நல்ல பலனை தரும். கெட்டு இருந்தால் பலன் கொஞ்சம் கெடுதலாக தான் தரும். ஏன் கொஞ்சம் கெடுதல் பலனை தரும் என்று சொல்லுகிறேன் என்றால் நடப்பது குரு தசா. 

குரு தசா நடைபெற்றால் எப்படிப்பட்ட கிரகங்கள் இருந்தாலும் ஒரளவுக்கு நல்லதை செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கும். அதனால் குரு கிரகத்தை பொருத்தவரை நல்லது செய்யும் என்று நம்பலாம்.

ஒரு சிலருக்கு குரு கிரகம் கெடுதலை செய்து இருக்கின்றது என்பதை பழைய பதிவில் சொல்லிருக்கிறேன் அவர்களுக்கு எப்படி தான் குரு நன்றாக இருந்தாலும் கெடுதலை செய்வார்.

எந்த தசாவும் நன்றாக இருந்து தசாவை நடத்தினால் தசாவின் கை ஒங்கி நல்ல பலனை தரும். எப்பேர்ப்பட்ட புத்தியையும் மிஞ்சி நல்ல பலனை தரும்.இனி வரும் பதிவுகளில் அனைத்தையும் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: