Followers

Thursday, December 19, 2013

குரு தசா பலன்கள் பகுதி 29


ணக்கம் ண்பர்களே!
                   குரு தசாவில் குரு புத்தி நடைபெற்றால் எப்படி பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

குரு தசா சுயபுத்தி
                குரு தசாவில் சுயபுத்தியின்(குரு தசா குரு புத்தி) காலஅளவு
2 வருடம் 1 மாதம் 18 நாட்கள்.

எந்த ஒரு தசாவும் சுயபுத்தியில் அதிக கெடுதலும் செய்யாது அதிக நன்மையும் செய்யாது சுமாரான பலனை தரும் என்று சொல்லுவார்கள். ஒரு சிலருக்கு அதிக நன்மையும் நடந்திருக்கிறது அதைப்போல் அதிக கெடுதலும் நடைபெற்று இருக்கிறது.

குரு கிரகம் நல்ல நிலைமையில் இருக்கவேண்டும். நல்லநிலைமையில் என்றால் உச்சவீட்டில் சொந்தவீட்டில் மற்றும் நட்பு வீட்டில் தீயவர்களோடு சேராமல் இருந்தால் நல்ல பலனை தரும்.

நாட்டின் தலைவன் உங்களை மதிப்பான். ஒரு நாட்டின் தலைவனே உங்களை தேடி வந்து மதிப்பான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய வீடு கட்டுதல் புதிய வேலை கிடைத்தல் பெரிய வாகனங்கள் வாங்குதல் மற்றும் திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறுதல் அல்லது திருமணம் நடைபெற்று இருந்தால் துணைவர் வழியில் சந்தோஷத்தை அடைதல் ஆகியவை நடைபெறும்.

உறவினர்கள் ஒன்றோடு வந்து கலந்துக்கொண்டு உங்களை கவனிப்பது. இந்த காலத்தில் உறவினர்கள் வந்தால் கூட எப்படா போய் சேருவார்கள் என்று நினைக்கும் காலம் நடந்துக்கொண்டு இருக்கின்றது. நான் சொல்லவேண்டியதை சொல்லிவிடுகிறேன். உறவினர்களை உபசரிப்பது போன்றவை நடைபெறும்.

வங்கிகள் கருவூலம் போன்றவற்றில் இருந்து உங்களுக்கு சாதகமான செய்திகள் வரும். ஆன்மீகவாதிகளின் நட்பு கிடைக்கும். கோவில்களை தேடி செல்வீர்கள். இவையாவும் குரு தசாவின் குரு புத்தியில் நடைபெறும் நல்லபலன்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: