Followers

Thursday, December 19, 2013

குரு தசா பலன்கள் பகுதி 30


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சுயபுத்தியில் கெடுதல் தருவதாக இருந்தால் எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்

குரு கிரகம் நீசம் அடைந்தாலோ  பகைவீட்டில் அமர்ந்தாலோ பாபகிரகங்கள் பார்வை குரு கிரகத்திற்க்கு இருந்தால் மற்றும் மறைவிடத்தில் குரு அமர்ந்து தசா நடந்தால் சுயபுத்தி அதிகமான கெடுதலை தரும்.

கெட்டபெயரை சம்பாதித்துக்கொடுத்துவிடும். மதிப்பு மரியாதை இல்லை என்றால் என்ன நடக்கும் ஊரில் மரியாதை இருக்காது. சொந்தக்காரர்கள் மதிக்கமாட்டார்கள்.அதிகமான துக்கத்தை கொடுத்துவிடும். மனதில் இனபுரியாத பயத்தை ஏற்படுத்திவிடும்.

ஒரு சிலருக்கு வீட்டில் உள்ளவர்களின் மரணசெய்தி அதிர்ச்சியை தரும். தந்தை வழியில் பகை உருவாகும். தந்தை உங்களை சதா திட்டிக்கொண்டே இருப்பார். உங்களுக்கும் தந்தைக்கும் நல்ல உறவு ஏற்படாது.

தொலைதூரபயணங்களில் நீங்கள் அதிகமாக கஷ்டப்படுவது போல் செய்துவிடுவார் குரு பகவான். தொலைதூரப்பயணங்களும் ஏற்படுவதில் பிரச்சினை ஏற்படும். குரு கெட்டு தன்னுடைய சுயபுத்தியில் அதிகமான கஷ்டங்களை தருகிறார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: