Followers

Friday, December 20, 2013

குரு தசா பலன்கள் பகுதி 32


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு தசா குரு புத்தியில் ஒரு உதாரண ஜாதகத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த ஜாதகத்தை பாருங்கள் இவரின் ஜாதகத்தில் லக்கினத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் கூட மாந்தி அமர்ந்திருக்கிறார். மேஷ ராசியை சனி பகவான் தன்னுடைய பத்தாவது பார்வையால் பார்க்கிறார். குருவிற்க்கு சனியின் பார்வை கிடைத்துவிட்டது. 

மேஷ லக்கினத்திற்க்கு செவ்வாய் அதிபதி. செவ்வாய் இரண்டாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். மேஷ லக்கினத்திற்க்கு ஒன்பது மற்றும் பனிரெண்டாவது வீட்டிற்க்கு குரு பகவான் அதிபதி. பாக்கியம் மற்றும் விரைய வீடுகளுக்கு காரகம் வகிக்கும் குருபகவான் லக்கினத்தில் அமர்ந்திருக்கிறார்.

குரு பகவான் தசாவை லக்கினத்தில் இருந்து தொடங்கிறார். சுயபுத்தியில் இவருக்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்த ஜாதகத்துக்கு உரியவர் அந்த பகுதியில் ஒரு தலைவராக இருந்தார். இளம் வயதில் பதவி வகித்தார். பதவி வழியாக தான் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் இவர் பஞ்சாயத்தில் மன்னிப்பு கேட்கும் நிலையும் உருவாகியது. 

இவர் எழுத்து வழியாக ஏதோ எழுதிக்கொடுத்தது பிரச்சினையாகிவிட்டது. நமக்கு வரும் பிரச்சினைகளை காட்டும் இடமான ஆறாவது வீட்டிற்க்கு உரியவர் புதன். புதன் கிரகம் சொந்த வீட்டில் இருந்தாலும் வில்லன் வில்லன் தான். எழுத்து வகைகளை காட்டுவது புதன் கிரகம் அலலவா அதன் வழியாக தான் பிரச்சினையே எழுந்தது.

இவர் சுயபுத்தியில் சந்தித்த பிரச்சினை இது. மாந்தி குருவோடு மற்றும் குருவிற்க்கு சனியின் பார்வை. பனிரெண்டாவது வீட்டிற்க்கு காரத்துவம் உடைய தசா. பாக்கியத்துவதற்க்கு உரிய மானம் மற்றும் சுயபுத்தியால் ஏற்ப்பட்ட இழப்பினால் இவருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டது.

உடலை காட்டும் இடமான லக்கினம். உடலை காட்டும் இடத்தில் இருந்து தசா நடைபெற்றதால் தன் உடலால் மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. சுயபுத்தி மட்டும் இவருக்கு பிரச்சினை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: