Followers

Friday, December 20, 2013

குரு தசா பலன்கள் பகுதி 33


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் ஒரு உதாரண ஜாதகத்தை பார்க்கலாம். மிதுன லக்கினத்தை உடையவர். புதன் ஐந்தாவது இடமான பூர்வபுண்ணியத்தில் அமர்ந்திருக்கிறார். குரு கிரகம் சொந்த வீட்டில் பத்தாவது இடத்தில் அமர்ந்திருக்கிறது. குரு கிரகம் சொந்த வீட்டில் இருந்து தசாவை நடத்துகிறது.

இவரின் ராசி ரிஷபம். குருவிற்க்கு சுக்கிரனும் எப்பொழுதும் பிரச்சினை மட்டுமே இருக்கும். இந்த ஜாதகத்தில் குரு கிரகம் பத்தாவது வீட்டில் சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறது. இவருக்கு குரு தசா ஆரம்பித்தவுடன் ஒரு நல்ல வேலையில் அமர்ந்தார். பத்தில் அந்தணன் தனித்து நின்றால் பதவியில் பிரச்சினை என்று உங்களுக்கு தெரியும் ஆனால் இவருக்கு சுயபுத்தியில் வேலையை பெற்று தந்தது.

குரு கிரகம் பத்தாவது வீட்டில் இருந்ததால் சுயபுத்தியில் வேலை கிடைத்தது. அதே நேரத்தில் சுயபுத்தியில் நல்ல வேலை கிடைத்தது.அதன் பிறகு நடந்த புத்தி எல்லாம் ஒரே இடத்தில் இவரை தங்கவைக்கவில்லை என்பது தனிக்கதை நமக்கு இப்பொழுது தேவை சுயபுத்தி மட்டுமே. இவரின் சுயபுத்தி இவருக்கு ஒரு நல்ல வேலையில் மிகப்பெரிய கம்பெனியில் அமரவைத்தது என்பதை சொல்லுவதற்க்காக தான் இதனை உங்களுக்கு தந்தேன்.

ஒரு தசாவின் சுயபுத்தியில் நல்லது நடந்தால் அந்த சுயபுத்தி முடிந்தவுடன் அதனை பறித்துக்கொள்ளும் என்றும் சொல்லுவார்கள் ஆனால் இவருக்கு சுயபுத்தி முடிந்தும் வேலையை பறிக்கவில்லை. ஏற்கனவே வேலையில் இருந்தாலும் இவருக்கு புதிய வேலை கிடைத்தது மிகப்பெரிய பன்னாட்டு கம்பெனியில் வேலை கிடைத்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: