Followers

Friday, December 20, 2013

குரு தசா பலன்கள் பகுதி 34


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் குருவின் சுயபுத்தியை பார்த்து வருகிறோம். சுயபுத்தியிலும் அந்தரநாதர்கள் இருப்பார்கள். இவர்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்துக்கொள்வது நல்லது.

முதலாளி தசாநாதன்
ஏஜென்ட் புத்திநாதன்
வேலை செய்யும் ஆட்கள் இருப்பார்கள் அல்லவா அவர்கள் அந்தரநாதர்களாக வருவார்கள். வேலை செய்யும் ஆட்கள் நல்ல ஆட்களாக இருந்தால் வேலை நன்றாக நடக்கும். ஒரு வேலை வேலையாட்கள் ஏமாற்ற நினைத்தால் வேலை ஒழுங்காக நடைபெறாது. சொதப்பிவிடுவார்கள். மேலே உள்ள முதலாளிக்கு தெரியவருவதற்க்கு வேலை சொதப்பல் நடந்துவிடும். இது போதும் என்று நினைக்கிறேன். 

குரு புத்தியில் உள்ள அந்தரநாதர்களைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

குரு புத்தி 2 வருஷம் 1 மாதம் 18 நாட்கள் இந்த வருடங்களுக்குள் ஒவ்வொரு அந்தரங்க நாதர்களும் வந்து புத்தியை நடத்திவிட்டு செல்லவேண்டும்.

குரு புத்தியில் குரு அந்தரநாதரின் காலம் 3 மாதம் 12 நாள் ஆகும். இதில் நாழி கணக்கு எல்லாம் வரும். அவ்வளவு துல்லியமாக யாரும் சோதிடப்பலனை கேட்கபோவதில்லை.

குரு தாசவில் குரு புத்தியின் பலனை சொல்லும்பொழுது குரு அந்தரகாலத்தில் இது நடைபெறும் என்று சொல்லவும்.

தசா நாதன், புத்திநாதன் மற்றும் அந்தரநாதன் மூன்று பேரும் ஒரே வீட்டில் தான் இருக்கபோகின்றனர். அதனால் இது சிக்கல் இல்லை.  எளிதில் பலனை சொல்லிவிடலாம்.
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: