Followers

Saturday, December 21, 2013

குரு தசா பலன்கள் பகுதி 40


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவில் சனிபுத்தியைப்பற்றி பார்த்து வருகிறோம் அதில் புத்திநாதனான சனிக்கிரகம் ஒவ்வொரு வீட்டிலும் அமரும்பொழுது எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை பார்க்கிறோம். தசாநாதனுக்கு புத்திநாதன் அமரும் வீட்டை வைத்து பலனை சொல்லிவருகிறேன். 

குரு கிரகம் லக்கினத்தில் அமர்ந்திருக்கிறது அதற்கு மூன்றாவது வீட்டில் புத்திநாதன் அமர்ந்திருக்கிறார். பலன் எப்படி இருக்கும் என்பதைப்பற்றி பார்க்கலாம். தசாநாதனுக்கு புத்திநாதன் மூன்றில் அமருவது அவ்வளவு நல்லதல்ல.
                    
மூன்றாவது வீட்டில் சனி இருந்தால் நல்ல தைரியத்தை ஜாதகருக்கு கொடுப்பார். அடிக்கடி பயணத்தை ஏற்படுத்திக்கொடுப்பார். அடிக்கடி பயணத்திலேயே இவருக்கு சங்கடங்கள் உருவாகும்.

மூன்றாவது வீட்டில் இருந்து நேரடி பார்வையாக ஒன்பதாவது வீட்டை பார்ப்பதால் தந்தை மற்றும் வயதானாவர்கள் வழியில் சண்டை சச்சரவை ஏற்படுத்திவிடுவார். 

மூன்றாவது வீட்டில் இருந்து சனிக்கிரகம் மூன்றாவது பார்வையாக ஐந்தாவது வீட்டை பார்ப்பார் புத்திமழுங்கி போய்விடும். தன் வாரிசுகள் போர்கொடி உயர்த்துவார்கள். இன்றைய காலகட்டத்தி்ல் யார் போர்க்கு எல்லாம் போகிறார்கள். எதிர்ப்பு தெரிப்பார்கள் என்று சொல்லவேண்டியது. 

மூன்றாவது வீட்டில் இருந்து சனிபகவான் பத்தாவது பார்வையாக பனிரெண்டாவது வீட்டை பார்ப்பார் அல்லவா. செலவு கட்டுக்குள் இருக்கும். தூக்கம் இல்லாமையால் அவதிப்படநேரிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: