Followers

Saturday, December 21, 2013

குரு தசா பலன்கள் பகுதி 41


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சனிபுத்தியை பார்த்து வருகிறோம். அதன் பலனை பார்க்கலாம்.
                    குரு கிரகம் லக்கினத்தில் அமர்ந்திருக்கிறது அதற்கு நான்காவது வீட்டில் புத்திநாதன் சனிபகவான் அமர்ந்திருக்கிறார். சனி புத்தி எப்படி பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

சனிக்கிரகம் நான்கில் அமர்ந்து நடப்பதால் ஒரு சிலருக்கு விவசாய நிலம் வாங்கும் யோகம் ஏற்படும். புதிய வீடுகள் கட்டவும் செய்வார். சுகமான வாழ்க்கைக்கு உதவார். தாயின் உடல்நிலை பாதிக்க செய்யும்.

நான்காவது வீட்டில் இருந்து சனிகிரகம் மூன்றாவது பார்வையாக ஆறாவது வீட்டை பார்க்கிறது ஆறாவது வீடு மறைவு ஸ்தானம். மறைவு ஸ்தானத்தை தீயகிரகங்கள் பார்ப்பது நல்லது செய்யும். எதிரிகள் இல்லாமல் போய்விடுவார்கள்.நோய்களின் தொந்தரவு ஏற்படாது. கடன்கள் ஏற்படாது. நல்ல வேலைக்காரர்கள் கிடைப்பார்கள்.

நான்காவது வீட்டில் இருந்து சனிக்கிரகம் நேரிடையான பார்வையில் பத்தாவது வீட்டை பார்க்கிறது. தொழில் வாய்ப்புகள் நன்றாக இருக்கும். வேலைகளில் பிரச்சினை ஏற்படாது.

நான்காவது வீட்டில இருந்து சனிபகவான் பத்தாவது பார்வையில் லக்கினத்தை பார்க்கிறார். லக்கினத்தில் தசாநடத்தும் குரு அமர்ந்திருக்கிறார். புத்திநாதனின் கை ஒங்கி இருக்கும். சனி லக்கினத்தை பார்ப்பதால் திடீர் உணர்ச்சிவசப்படுதல் நடைபெறும். மனதில் ஒரு வித படபடப்பு இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: