Followers

Saturday, December 21, 2013

குரு தசா பலன்கள் பகுதி 42


வணக்கம் நண்பர்களே !
                    குரு தசாவில் சனியின் புத்தியை பார்த்துவருகிறோம். குரு எங்கு நின்றாலும் அதற்கு சனிக்கிரகம் நிற்க்கும் வீட்டை வைத்து சனியின் புத்தியை பார்த்து வருகிறோம்.

குருவிற்க்கு ஐந்தாவது வீட்டில் சனி நிற்கிறது. சனிக்கு குருவின் ஐந்தாவது பார்வை கிடைக்கிறது. சனிக்கிரகம் நல்லதை அதிகமாக செய்யும்.

சனிக்கிரகம் ஐந்தாவது வீட்டில் நின்றால் நல்ல புத்தி வேலை செய்யும். போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவீர்கள். காதல் திருமணம் கைகூடும். 

ஐந்தாவது வீட்டில் இருந்து சனிக்கிரகம் மூன்றாவது பார்வையாக ஏழாவது வீட்டை பார்ப்பதால் துணைவர் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவார். உங்களின் கூட்டுத்தொழிலை காட்டும் இடம் ஏழாவது இடம் என்பதால் அப்பேர்ப்பட்ட தொழில் செய்தால் நல்லது நடக்கும். 

சனியின் நேரடியான பார்வை லாபஸ்தானத்திற்க்கு கிடைப்பதால் எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றி என்ற நிலையில் இருக்கும்.எந்த வேலை செய்தாலும் அதில் லாபம் என்பது இல்லாமல் இருக்காது.

ஐந்தாவது வீட்டில் இருந்து சனிக்கிரகம் பத்தாவது பார்வையில் இரண்டாவது வீட்டைப்பார்ப்பதால் தனம் நிறைந்து இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குருவிற்க்கு கீழ் சனி வேலை செய்வதால் வீட்டில் புதிய நபர் ஒருவர் வருவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: