Followers

Saturday, December 21, 2013

குரு தசா பலன்கள் பகுதி 43


வணக்கம் நண்பர்களே!
                     குரு தசாவில் சனியின் புத்தியைப்பற்றி பார்த்து வருகிறோம். சனியின் புத்தியை தசாநாதனுக்கு ஒவ்வொரு வீடாக சனிக்கிரகம் நின்றால் எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை பார்த்து வருகிறோம்.

சனிக்கிரகம் ஆறாவது இடத்தில் நின்றால் நல்ல வேலைகள் கிடைப்பார்கள் அதே நேரத்தில் நமக்கு நோயும் வரும் தசாநாதனுக்கு மறைவு ஸ்தானத்தில் நிற்கிறது. சனி ஆறில் நிற்பது நல்லது என்றாலும் நோய் தொந்தரவு இருக்கும்.

ஆறாவது வீட்டில் இருந்து சனிபகவான் மூன்றாவது பார்வையாக எட்டாவது வீட்டைப் பார்ப்பார். ஒரு சில அவமானங்கள் ஏற்படும். வீட்டில் உள்ளவர்கள் எதற்கும் உருப்படாதவன் என்று திட்டுவார்கள். 

ஆறாவது வீட்டில் இருந்து நேரடியான பார்வையாக சனிக்கிரகம் பனிரெண்டாவது வீட்டை பார்க்கும் செலவு அதிகமாக விரையமாகும். மருத்துசெலவுக்கு  செலவு செய்ய நேரிடும். உங்களின் உடலுக்கு மருத்துவ செலவு செய்ய நேரிடும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படவேண்டும்.

ஆறாவது வீட்டில் இருந்து சனிபகவான் பத்தாவது பார்வையாக மூன்றாவது வீட்டை பார்க்கும் காதில் பிரச்சினை ஏற்படும். தொலைத்தொடர்புகள் நல்ல சேதி வரும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: