Followers

Sunday, December 22, 2013

குரு தசா பலன்கள் பகுதி 45


வணக்கம் நண்பர்களே!                    
                                             குரு தசாவில் சனி புத்தியைப்பற்றி பார்த்து வருகிறோம். 

சனிக்கிரகம் எட்டாவது வீட்டில் இருந்து புத்தி நடைபெற்றால் உயில் வழியாக சொத்துக்கள் அல்லது காப்பீட்டு வழியில் பணம் சேரும். விபத்துக்கள் ஏற்படும். அதனால் உடல்நிலை பாதிக்கப்படும்.

எட்டாவது வீட்டில் இருந்து சனி பகவான் மூன்றாவது பார்வையாக பத்தாவது வீட்டை பார்க்கிறார் தொழில் சிறக்கும். புதிய தொழில்வாய்ப்புகள் ஏற்படும். இதுவரை தொழில் இருந்து வந்த பிரச்சினை எல்லாம் முடிவுக்கு வந்து நல்ல நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

எட்டாவது வீட்டில் இருந்து நேரடியான பார்வையால் இரண்டாவது வீட்டை பார்க்கும். தனவீட்டை பார்ப்பதால் தனவரவில் பிரச்சினை ஏற்படும். தனவரவு வந்தாலும் குறைவாக தான் வரும். குடும்பத்தில் உள்ளவர்களால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படும். குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்படும்.

எட்டாவது வீட்டில் இருந்து பத்தாவது பார்வையில் பூர்வபுண்ணியஸ்தானத்தை பார்ப்பதால் குழந்தைகள் வழியாக பிரச்சினை ஏற்படும். அவர்களின் செயல் உங்களுக்கு வருத்தமளிக்கும். மனக்கவலை ஏற்படும். நிம்மதியற்ற நிலை மற்றம் அனைத்திலும் தடங்கல்கள் ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: