Followers

Wednesday, December 25, 2013

குரு தசா பலன்கள் பகுதி 59


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் புதன் புத்தியைப்பற்றி பார்த்து வருகிறோம். புதன் புத்தியில் நல்லதை மட்டுமே சொல்லி்க்கொண்டு வருகிறேன். புதன் கெட்டால் நல்லதற்க்கு எதிராக நடைபெறும் என்பதை நீங்களவே பார்த்துக்கொள்ளுங்கள்.

புதன் கிரகம் ஐந்தாவது வீட்டில் இருந்து தன் புத்தியை நடத்தினால் நுண்ணறிவை காட்டும் இடம் அல்லவா. அதிகப்பட்சமான அறிவு தன்மை வெளிப்படும். விளையாட்டு துறையில் வெற்றி வாய்ப்பை பெறலாம். திருமணம் முடிந்திருந்தால் இரட்டை குழந்தைகள் பிறக்கும்.

பூர்வபுண்ணியத்தை காட்டகூடிய இடம் என்பதால் அதோடு குருவின் தசாவும் இருப்பதால் உங்களின் பூர்வபுண்ணியத்தில் உள்ளவர்களை அடையாளம் காண ஒரு வாய்ப்பை இந்த புத்தி வழங்கும். நல்ல பலனை அதிகமாக கொடுக்ககூடிய வாய்ப்பு இருக்கின்றது.

புதன் கிரகம் ஆறாவது வீட்டில் இருந்து தன் புத்தியை நடத்தினால் மாமனின் உதவி உங்களுக்கு கிடைக்கும். கடன் தொந்தரவு இருக்காது. நோய்கள் இருக்காது. உங்களுக்கு நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.

சத்ரு ஸ்தானம் என்பதால் விரோதிகளின் செயல்பாடு அந்தளவுக்கு இருக்காது ஆனால் அவர்களின் பேச்சு அதிகமாக இருக்க செய்வார் புதன்.எதிராளிகளின் பேச்சு சில நேரங்களில் சண்டை உண்டாக்குவது போல் இருக்கும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: