Followers

Wednesday, December 25, 2013

குரு தசா பலன்கள் பகுதி 60


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் புதன் புத்தியை பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சி புதன் கிரகம் நல்ல நிலையில் இருந்து புத்தி நடைபெற்றால் எப்படி பலனை தரும் என்பதை பார்க்கலாம்.

புதன் கிரகம் ஏழாவது வீட்டில் இருந்து புத்தியை நடத்தினால் உங்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமணம் நடைபெறும். உங்களுக்கு நகரவாழ்வில் புதிய கூட்டுத்தொழிலை ஆரம்பிக்கமுடியும். வங்கியில் உதவி பெறமுடியும்.

புதன் கிரகம் எட்டாவது வீட்டில் நின்று புத்தியை நடத்தினால் உயில் வழியாக கண்டிப்பாக சொத்து வரும். சேமிப்பில் இருந்து பணம் பெறமுடியும்.உங்களின் துணைவருக்கு வருமானம் கிடைக்கும் இதில் அதிக்பட்சமான நன்மைகளை எதிர்பார்க்கமுடியாது.

புதன் கிரகம் ஒன்பதாவது வீட்டில் நின்று புத்தியை நடத்தினால் உயர்படிப்பை படிக்க விருப்பம் வரும். அயல்நாட்டுக்கு செல்லமுடியும். பத்திரிக்கையில் நீங்கள் சாதிக்கமுடியும். பெருமாள் கோவில் யாத்திரை செல்லமுடியும்.உங்களின் ஊரில் புதிதாக கட்டப்பெறும் கோவிலுக்கு உங்களை தலைமை தாங்கவைப்பார்கள்.

புதன் கெட்டு இருந்தால் மேலே சொன்ன நல்லவற்றிக்கு எதிராக நடைபெறும் என்று சொல்லுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: