Followers

Thursday, December 26, 2013

குரு தசா பலன்கள் பகுதி 62


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு தசாவில் புதன் புத்தியை பார்த்தோம். இதில் ஒரு உதாரண ஜாதகத்தை பார்க்கலாம். இந்த ஜாதகத்தின் லக்கினம் சிம்மம் அதன் அதிபதியான சூரிய பகவான் மூன்றாவது வீட்டில் அமர்ந்துள்ளார். லக்கினத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளார். குரு கிரகத்தோடு சனி மற்றும் ராகு கிரகங்கள் அமர்ந்துள்ளது. சனி+ராகு சேர்ந்து அமர்ந்துள்ளதால் குருவால் தன்னுடைய தசாவில் அந்தளவுக்கு பலனை கொடுக்கமுடியாது. 

குரு தசாவின் சுயபுத்தி மற்றும் சனிபுத்தி இரண்டும் சரியான பலனை தரவில்லை ஆனால் புதன் புத்தி நல்ல பலனை தந்தது. குரு சனி இரண்டும் ராகுவோடு சேர்ந்து இருந்ததால் பிரச்சினை மேல் பிரச்சினை ஏற்பட்டது. அவர்களால் நல்ல பலளை கொடுக்கமுடியவில்லை. 

புதன் குருவிற்க்கு நான்காவது வீட்டில் நின்றது. என்ன தான் தசாநாதன் கெட்டாலும் புத்தி நாதன் நின்று தன் நல்ல பலனை தந்தது. ஒருத்தருக்கு எப்படிபட்ட மோசமான தசாவாக இருந்தாலும் ஒரு சில புத்திகள் நல்ல பலனை கொடுத்து அந்த மனிதனை காப்பாற்றும்.

இந்த பையனுக்கு இளவயதாக இருந்தாலும் அந்த நேரத்தில் ஒரு வெளிநாட்டு படிப்பை படிக்க உதவியது. அந்த படிப்பால் அவர் வெளிநாடு சென்று அங்கே நல்ல வேலை கிடைக்கும்படி செய்தது. இது ஒன்றே அவருக்கு போதமானதாக இருந்தது. ஒரு சிலருக்கு ஒரு சில புத்தி அவர்களின் வாழ்க்கையை திருப்பிபோடவைக்கும். இவருக்கு இந்த புத்தி மிகப்பெரிள அளவில் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுத்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: