Followers

Tuesday, December 24, 2013

பூர்வ புண்ணியம் 66


வணக்கம் நண்பர்களே!
                    பூர்வபுண்ணியத்தை முன்பு எழுதுவது போல் இப்பொழுது அதிகமாக பதிவு போடுவதில்லை. அதைப்பற்றி நிறைய எழுதுங்கள் என்று நமது நண்பர்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஜாதககதம்பத்தில் பதிவுகள் அதிகமாக எழுதுகிறேன். அந்த காரணத்தால் பூர்வபுண்ணியத்தை எழுதமுடியவில்லை நேரம் இருக்கும்பொழுது அதனையும் எழுதுகிறேன். நேரம் இருக்கும்பொழுது விலாவாரியாக எழுதிவிடலாம். கவலையை விடுங்கள். 

பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் பூர்வபுண்ணியம் கெட்டுதான் பிறக்கிறார்கள். மனிதனாக பிறப்பதே கர்மாவை கழிக்கமட்டுமே. அனைவருக்கும் பூர்வபுண்ணியம் கெட்டு இருக்கும். இதில் அதிகமாக கெட்டு இருக்ககூடாது. அப்படி இருக்கும்பொழுது பிரச்சினை வருகிறது. அவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். 

ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார் இதில் இருந்து நாங்கள் விடுபட வழி என்ன என்று சொல்லுங்கள் என்றார். கர்மாவை தொலைப்பதற்க்கு பல வழிகள் சொல்லப்பட்டிருந்தாலும் அதில் ஒன்றை சொல்லுகிறேன்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு செல்லும்பொழுது நீங்கள் செல்லமுடியவில்லை என்றால் கண்டிப்பாக பூர்வபுண்ணியம் கெட்டு இருக்கின்றது என்று அர்த்தம். அதற்கு ஒரு வழி உங்களின் குலதெய்வத்திற்க்கு சம்பந்தப்பட்ட நபரை அழைத்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை செல்லுங்கள் அப்படி சென்ற பிறகு நீங்கள் தனியாக சென்று பாருங்கள். தனியாக செல்ல முடிந்தது என்றால் உங்களுக்கு கர்மா குறைந்து வருகிறது என்று அர்த்தம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: