Followers

Wednesday, December 25, 2013

கர்மாவை தோல்வி அடைய செய்யுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் நேரில் சோதிடம் பார்ப்பவர்களிடம் பலனை சொல்லிவிட்டு பரிகாரத்தை செய்துவிட்டு என்னை வந்து பாருங்கள் என்று ஒரு சிலருக்கு நான் சொல்லுவேன். அப்படி எதற்க்காக சொல்லுகிறேன் என்றால் அவர்கள் திரும்பி வந்தால் அவர்களுக்கு செய்ய வேண்டியதை அம்மனிடம் வைத்து செய்யலாம் என்று சொல்லுவது உண்டு.

திரும்பி என்னை வந்து பார்க்கும் நபர்களிடம் கட்டணம் வசூலிப்பதும் கிடையாது. ஒரு முறை மட்டும் தான் கட்டணம் அதன் பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம் என்று சொல்லிவிடுவேன்.

அவர்களுக்கு அறிவுரை சொல்லி சொல்லி பரிகாரத்தை செய்துவிட்டு வந்து பார்ப்பார்கள் என்று நான் சொல்லிவிட்டு நான் காத்துக்கொண்டே இருக்கவேண்டியது தான். ஒருவரும் திரும்பி வந்து என்னை பார்ப்பதே கிடையாது.

ஏன் அவர்கள் என்னை வந்து பார்ப்பது கிடையாது என்று பார்த்தால் அவர்களின் கர்மா அவர்களை தடைசெய்கிறது. கர்மாவை மீறி அவர்களால் வந்து என்னை பார்ககமுடிவதில்லை. முதல் தடவையே செய்யலாம் ஆனால் குருவே முதல் தடவை செய்யாதே என்று கட்டளை விதித்து இருக்கிறார்.

கர்மா மீறி அவர்கள் வருகிறார்களா என்று பார். வந்த பிறகு செய்துக்கொள்ளலாம் என்பார். உண்மையும் அப்படி தான் உள்ளது. ஒரு சிலர் மட்டும் விடாபிடியாக பிடித்து என்னை வந்து சந்தித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு செய்து கொடுத்துவிடுகிறேன்.பலருக்கு வரமுடியவில்லை. கர்மாவோடு போராட வேண்டியுள்ளது.

படிக்கும் நீங்களும் உங்களை நான் வரச்சொல்லிருந்தால் உங்களால் வரமுடியும் என்றால் என்னை வந்து சந்தித்து பாருங்கள்.கர்மாவை மீறி வந்து சந்தியுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: