Followers

Wednesday, December 18, 2013

அம்மனின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    திருவனந்தபுரத்தில் இருந்து இந்த பதிவை உங்களுக்கு எழுதுகிறேன். காலையில் வேலையை முடித்துவிட்டு பத்மநாபசுவாமியை தரிசனம் செய்தேன். இன்று தான் முதன் முதலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தேன். உங்களுக்காகவும் வேண்டிக்கொண்டேன். நல்ல தரிசனம் கிடைத்தது.

தமிழ்மொழியில் பதிவை எழுதினாலும் பிறமொழி மக்களும் என்னை ஆதரிக்கிறார்கள். அவர்களும் நமது பதிவை அதிகமாக படிக்கிறார்கள். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்றே நினைக்கிறேன். அனைவருக்கும் நான் ஒழுங்காக செய்து தருவதால் மட்டுமே என்னை நம்பி வருகிறார்கள் அந்த நம்பிக்கையை அம்மன் உங்களுக்கு செய்து தருகிறது.

இனிவரும் காலங்களில் அனைத்து நண்பர்களும் அம்மனை நம்பி வரும்பொழுது உங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்பதை இந்த நேரத்தில் சொல்லுகிறேன். அம்மனின் சக்தி அப்படிப்பட்டது. உணர்ந்துக்கொண்டவர்கள் பயன் அடைகிறார்கள்.

கேரளாவிலும் நமக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் உருவாகிவிட்டார்கள். கேரளாவைப்பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த பூமியில் என்னை நம்பி வருகிறார்கள் என்றால் அம்மன் எப்படி வேலை செய்யும் என்பதை நீங்களே உணர்ந்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: