Followers

Thursday, December 19, 2013

கேரளா அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    இவர் எங்கு சென்றாலும் அந்த அனுபவத்தை வேறு எழுதி எங்களை தொல்லைப்படுத்துகிறார் என்று நினைக்கவேண்டாம். இதனை படித்தால் நன்றாக இருக்கும்.

திருவனந்தபுரம் செல்வது இது இரண்டாவது தடவை. பதிவு வழியாக நண்பர் ஒருவர் அறிமுகமானர். அவருக்கு ஒரு பிரச்சினை ஏற்ப்பட்டது. அவர் நல்ல வர்த்தகம் நடக்கும் சந்தையில் ஒரு பில்டிங் கட்டிருந்தார். அந்த பில்டிங் கட்டிய நேரத்தில் இருந்து ஒருவர் கூட வாடகைக்கு வராமல் இருந்தனர். அவருக்கு அது மிகப்பெரிய இழப்பாக இருந்தது. 

அவர் என்னை தொடர்புக்கொண்டு செய்ய சொல்லிருந்தார். நான் எனது வீட்டில் இருந்து செய்து பார்த்தேன். ஒன்றும் கதை நடக்கவில்லை. யாரும் வரவில்லை என்று சொல்லிருந்தார். சரி என்று நான் கேரளா வருகிறேன் என்று சொல்லிருந்தேன். 

ஒரு நாள் சென்று அவரின் வீட்டில் பூஜை செய்துவிட்டு நேராக அவரின் பில்டிங்கை பார்த்தேன். பார்த்தபொழுது அங்கு இருக்கும் பிரச்சினை என்ன என்று தெரிந்தது. உடனே வாஸ்து பார்த்திருக்கிறார் என்று நினைக்கவேண்டாம். நமது வழியில் அதனை பார்த்தபொழுது பிரச்சினை என்ன என்று புரிந்தது.

ஒரு நாள் சென்று அவரின் வீட்டில் பூஜை செய்துவிட்டு நேராக அவரின் பில்டிங்கை பார்த்தேன். பார்த்தபொழுது அங்கு இருக்கும் பிரச்சினை என்ன என்று தெரிந்தது. உடனே வாஸ்து பார்த்திருக்கிறார் என்று நினைக்கவேண்டாம். நமது வழியில் அதனை பார்த்தபொழுது பிரச்சினை என்ன என்று புரிந்தது.

48 நாட்கள் அவர்களுக்கு காலம் கொடுத்து இருந்தேன். அவரும் பொறுமையாக இருந்தார். 48 நாட்களுக்கு பிறது அவரின் பில்டிங் வாடகைக்கு ஆட்கள் வந்தார்கள். அவருக்கும் ஒரு வியாபாரம் அம்மனின் அருளால் கிடைத்தது. அவரின் நல்ல மனது எனக்கு கிடைத்த இந்த ஒன்றை அடுத்தவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று நினைத்து அவரின் வழியாக பல தொடர்புகள் இப்பொழுது வந்துக்கொண்டு இருக்கிறது.

அம்மன் அவருக்கு அனைத்தையும் செய்துக்கொடுத்துவிடும். நான் யாரையும் மனதில் நினைத்துக்கொண்டிருக்க மாட்டேன் ஆனால் அம்மன் அனைவரையும் கவனித்துக்கொண்டிருக்கும். யார்க்கு என்ன செய்யவேண்டும் என்பதை அது தீர்மானித்து சரியாக நடத்திக்கொடுக்கும்.ஒவ்வொரு ஊரிலும் அம்மனின் புகழ் பரவதற்க்கு நமது நண்பர்கள் உதவி செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.அனைத்தையும் முடித்துவிட்டு சென்னை வந்து சேர்ந்துவிட்டேன். இனி தொடர்ந்து பதிவுகளை பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: