Followers

Tuesday, December 24, 2013

அம்மன் பெருமை


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு நண்பர் என்னை சந்திக்கும்பொழுது ஒரே அம்மனை பற்றியே பெருமையாக சொல்லுகிறீர்களே அதற்கு காரணம் என்ன என்று கேட்டார். 

பிழைப்பை கொடுப்பது அம்மன் அல்லவா அதனால் அம்மனைப்பற்றி பெருமையாக சொல்லுகிறேன். அம்மன் பெருமையைப்பற்றி எந்தளவுக்கு நான் வெளிப்படுத்துகிறோனோ அந்தளவுக்கு எனக்கு அம்மன் நல்லதை செய்துக்கொடுக்கும். 

நான் விடுகின்ற ஒவ்வொரு மூச்சு சுவாசத்திலும் அம்மனை பற்றியே தான் இருக்கும். அந்த சிந்தனை மட்டும் இன்றும் வாழவைத்திருக்கிறது. அம்மன் இல்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாது. என்னை அறியாமலேயே அம்மனின் பெயரை பதிவில் மற்றும் பேச்சில் சொல்லிக்கொண்டே இருக்க வைக்கும்.

மூச்சுக்கு ஒரு தடவை சொல்லும்பொழுது அது உங்களுக்கு அப்படி ஒரு எனர்ஜியை கொடுக்கிறது. அதனாலேயே அம்மனை பற்றி சொல்லிக்கொண்டே இருப்போம். பல நண்பர்கள் என்னிடம் சொல்லும்பொழுது அம்மனே சொல்லுகிறீர்களே அய்யாவை சொல்லகூடாத என்பார்கள். அம்மன் இருக்கும் இடத்தில் தான் அய்யா இருப்பார். 

சிவனில் பாதி அம்மன் என்று உங்களுக்கு தெரியாத அப்படி இருக்கும்பொழுது அய்யா எங்கு செல்லமுடியும் அம்மாவோடு தான் இருப்பார். அம்மனின் பெருமையை இன்னும் எனது காலமும் முழுவதும் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: