Followers

Monday, December 16, 2013

சோதிட அனுபவம்


ணக்கம் ண்பர்களே!
                    ஒவ்வொருவரின் ஜாதகம் என்பது புரியாத புதிராக தான் இருக்கும். ஒரு சிலருக்கு ஏகாப்பட்ட கிரகங்கள் அடிப்பட்டு இருக்கும் அவன் மிகப்பெரிய வெற்றி பெற்று இருப்பான். ஒரு சிலருக்கு ஏகாப்பட்ட கிரகங்கள் உச்சத்தில் இருக்கும் ஒன்றும் நடைபெறாது அன்றாடம் காய்ச்சியாக இருப்பார்கள். இதற்கு எல்லாம் காரணம் என்ன என்று பார்த்தால் அவனுக்கு சரியான நேரத்தில் சரியான தசா நடைபெறுவதில்லை.

ஒரு சில ஜாதகங்களை நான் அப்படி பார்த்திருக்கிறேன். நல்ல கிரகங்கள் அமைந்தும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். நடைபெறும் தசா கெடுதல் தரும் நிலையில் இருக்கும். அதன் பிறகு நல்ல தசா வரும்பொழுது ஒரு துணையை தேர்ந்தெடுப்பார்கள். வாழ்க்கையில் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லாமல் போய்விடும்.

இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏன் ஏற்படவில்லை என்று பார்த்தால் அவருக்கு வந்த துணை இவரின் நல்ல நேரத்தை அடித்து துவைக்க ஆரம்பிக்கும். துணைவரின் ஜாதகம் சரியில்லை என்றால் அவரையும் சரிப்படுத்திக்கொண்டு இவருக்கும் நன்மை செய்யவேண்டும். ஒரு ஆளுக்கு வேலை செய்வதற்க்கு பதில் இரண்டு ஆட்களுக்கு வேலை செய்யவேண்டும். பலன் குறைவாக தான் கிடைக்கும்.

இவரின் வீட்டைப்பற்றி சொல்லியாக வேண்டும். வீட்டில் பிரச்சினை இருந்தால் என்ன தான் நல்ல தசா நடந்தாலும் முன்னேற்றம் அடைவதற்க்கு கொஞ்சம் பிரச்சினை இருக்கும். நல்ல போய்க்கொண்டு இருப்பது போல் வெளியில் தெரியும் உள்ளுக்குள் ஒன்றும் இருக்காது.

இதனை எல்லாம் மீறி நல்ல தசா பலன் கொடுக்கும்பொழுது நமக்கு முழுபலனையும் கொடுக்காமல் குறைவான பலனை கொடுத்துக்கொண்டிருக்கும். சம்பந்தப்பட்ட நபர் என்னடா வாழ்க்கை நாம் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று மனதைப்போட்டு குழப்பிக்கொண்டு இருப்பார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: