Followers

Tuesday, December 24, 2013

பாசகார பய


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஆன்மீகவாதியாக மாறினாலே பொதுவாக பாசம் வைக்கமாட்டார்கள் யார் மீதும் எதற்கும் பாசவைக்கமாட்டார்கள். ஏன் ஒரு சோதிடர்களாக மாறினால் கூட எந்த ஒரு உறவும் இருக்ககூடாது என்று நினைப்பார்கள். தொழில் நடத்தமுடியாது என்று உறவு வைக்கமாட்டார்கள்.

இந்த இடத்தில் நான் விதிவிலக்கு ஏன் என்றால் அனைவரின் மீதும் நான் அதிக பாசம் வைப்பேன். ஏன் அப்படி வைக்கிறேன் என்று தெரியாது ஆனால் என்னிடம் பழகும் அனைவரிடமும் அன்பாக பழகுவேன். இதனை பல பேர்கள் என்னை வந்து சந்தித்து பிறகு தான் அவர்களுக்கு தெரிந்தது. இப்படிப்பட்ட ஒரு ஆளா என்று சொல்லுவார்கள்.

இந்த பாசத்திற்க்கு என்ன காரணம் என்றால் அம்மனை எடுத்தது தான் காரணம். வேறு எந்த தெய்வத்திற்க்கும் இல்லாத ஒன்று அம்மனிடம் இருக்கும். நீங்கள் எந்த ஒரு அம்மனை எடுத்தாலும் பாசம் என்பது இயற்கையாகவே வந்துவிடும்.

சிவனையோ பெருமாளையோ வைத்திருப்பவர்கள் அவ்வளவு எளிதில் கீழே இறங்கி வந்து பழகமாட்டார்கள். நான் எல்லாரிடமும் சகஜமாக பழகுவேன். இப்பொழுது நமது நண்பர்களுக்கு ஒன்று என்றால் உடனே நானும் பதட்டப்பட்டு செயல்படுவேன்.அனைத்திற்க்கும் காரணமும் அம்மன் தானே தவிர வேறு ஒன்றும் இருக்கமுடியாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: