Followers

Sunday, December 29, 2013

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    என்னை சந்திக்க வந்த நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். அவருக்கு பதிலை சொல்லிவிட்டேன். உங்களுக்கும் இதனை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறேன்.

கேள்வி நீங்கள் திருமணம் செய்யும்பொழுது ஜாதகம் பார்ப்பீர்களா?
அதாவது பெண்ணின் ஜாதகத்தில் நல்ல ஜாதகத்தை தேர்ந்தெடுத்து திருமணம் செய்வீர்களா என்று கேட்டார்.

பதில்
     சோதிடம் என்பது 100 சதவீதம் உண்மை என்று நம்புகிறவன் தான். ஜாதகத்தில் உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொடுக்கும் வேலையை தான் நான் செய்துக்கொண்டு இருக்கிறேன். எப்படிப்பட்ட மோசமான ஜாதகத்தையும் எடுத்து அதில் உள்ள நல்ல கிரகங்களின் துணையோடு ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நன்றாக நடக்கும்படி செய்கிறேன். 

இப்படி செய்வது என்பது கிரகத்தை மீறி நாங்கள் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்.அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இப்பொழுது என்னோடு தொழில்க்கு உதவி கேட்பவர்களுக்கு செய்துக்கொடுத்து கொண்டிருக்கும் வேலையும் இது தான். அவர்களின் ஜாதகத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கவேண்டும் ஆனால் என்னால் அவர்களுக்கு லாபத்தை கொடுக்கமுடிகிறது என்றால் எங்களின் வேலை எப்படிப்பட்டது என்று தெரியும்.

இதனை விட மிகப்பெரிய சக்தி என்ன என்றால் எங்களை போல் இருப்பவர்கள் வைத்திருக்கும் தெய்வம் அவர்களின் குடியை காக்கும். நான் திருமணம் செய்யும் பெண்ணையும் காக்கும். அதே நேரத்தில் அதனை அவர்கள் பயன்படுத்தமுடியும். எனக்கு பிறகு அல்லது ஒரே காலத்தில் அவர்கள் அந்த தெய்வத்தை தன்னோடு வைத்திருக்கமுடியும். வேலையை சொன்னாலும் அந்த தெய்வம் அவர்களுக்கு செய்துக்கொடுக்கும். எப்படிப்பட்ட மோசமான ஜாதகத்தையும் தேர்ந்தெடுப்பேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: