Followers

Friday, January 31, 2014

வெள்ளிக்கு வெண்மையான ஒரு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர்க்கு நான் கதர் வேஷ்டி சட்டையை வெள்ளை கலரில் அணிந்துக்கொள்ளுங்கள் என்று பரிந்துரை செய்தேன். எதற்கு சொன்னேன் என்றால் அவர் சுக்கிரனின் வீடான துலாம் ராசியை உடையவர். அதனால் அவ்வாறு அணிந்துக்கொள்ளுங்கள் என்றேன்.

எங்களின் ஊரான தஞ்சாவூர் பகுதிக்கு சென்றால் அங்குள்ளவர் கதர் வேஷ்டி சட்டை அணிந்திருப்பதை பார்ப்பதற்க்கு மிக அருமையாக இருக்கும். அவர்களின் வேஷ்டி சட்டை தான் அவர்களின் அந்தஷ்தை காட்டுகிறது. ஒருவர் கதர் வேஷ்டி சட்டை அணிந்தால் அவர்க்கு என்று தனிமரியாதையை இந்த உலகம் தருகிறது. 

அந்த நபர்களிடம் காசு இல்லை என்றால் கூட கதர் வேஷ்டி அணிபவர்களை இந்த உலகம் கண்டு மரியாதை கொடுக்கும். சுக்கிரன் காரகம் வகிக்கும் வெள்ளை வேஷ்டி சட்டையை வெள்ளிக்கிழமையாவது அணிந்துக்கொள்வது நல்லது.

ஒருவருக்கு சுக்கிரன் கிரகம் அடிக்கும் ஆப்பு என்பது வெளியில் தெரியாது. அந்தளவுக்கு ஆப்பு அடிக்கும். நாங்கள் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு தான் முதன் முதலில் பரிகாரத்தை செய்வோம். நீங்கள் சுக்கிரனின் பலனை பெறுவதற்க்கு குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமையாவது வெள்ளை வேஷ்டி அல்லது வெள்ளை சட்டையாவது அணிந்துக்கொள்ளுங்கள்.கொஞ்ச நாள் அணிந்து பாருங்கள் உங்களுக்கே உங்களின் மீது ஒரு மரியாதை வரும். சுக்கிரனின் ஆதிக்கம் என்ன என்று உங்களுக்கு தெரியும்.

அடுத்த வெள்ளிக்கிழமை அனைவரும் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்துக்கொண்டு எனக்கு போட்டோ எடுத்து அனுப்புங்கள் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!

கேள்வி
                      அருள்மணி:  சார் உங்களை நம்பி தானே வருகிறோம் ஏன் சோதனை செய்கிறீர்கள் ?நீங்களே இப்படி செய்யலாமா?

பதில்

வணக்கம் நண்பரே நான் என்ன செய்வது ஒரு மனிதனை ஒரே பார்வையில் பார்த்து தெரிந்துக்கொண்டாலும் அவர்களின் கர்மாவின் கணக்கை சரிசெய்ய இப்படி செய்வது உண்டு. மனிதர்கள் என்பவர்கள் தன் வேலை முடிந்து விட்டால் எட்டி உதைப்பார்கள் என்று தெரியும்.  இதனை வெளியில் இருந்து பார்க்கும்பொழுது திமிர் பிடித்தவர்கள் என்று தோன்றும் ஆனால் உள்ளுக்குள் இப்படி செய்தால் தானே அவர்கள் திருந்துகிறார்கள்.

இப்படி செய்யும்பொழுது அவர்களுக்கு ஒன்று விளங்கும் நாம் ஏன் இப்படி இவர்களை போல் மாறக்கூடாது என்று நினைப்பார்கள். அல்லது இனிமேல் எந்த தவறும் செய்யகூடாது என்று நினைக்கதோன்றும். எந்த ஒரு காரணமும் இல்லாமல் இப்படி செய்வது கிடையாது அனைத்திற்க்கும் காரணம் இருக்கின்றது. 

எங்களை ஒட்டிக்கொண்டு தான் வாழவேண்டும் என்று நாங்கள் நினைப்பதில்லை. எங்களிடம் யாராவது எதையாவது பேசினால் நாங்கள் சொல்லுவது எங்களின் வயிற்றுவலிக்கு நாங்கள் உங்களை தேடிவரவில்லை உங்களின் வயிற்றுவலிக்கு நீங்கள் தான் எங்களை தேடி வந்தீர்கள் என்று சொல்லுவது உண்டு.

நான் அனைவரிடமும் நாகரீகமாக நடந்துக்கொள்வேன். ஒரு சில சாமியார்கள் நாகரீகம் என்றால் என்ன என்று கேட்பார்கள். கெட்டவார்த்தையால் கூட திட்டுவார்கள். பொதுவாக எந்த ஆன்மீகவாதியும் யாரையும் தேடிபோவதில்லை மக்கள் தான் தேடி போவார்கள்.

ஒரு சில சாமியார்களை நான் பார்த்திருக்கிறேன் பயங்கர கோபம் வரும். அது அவர்களின் குணம். தனிமையிலேயே இருப்பவர்கள் அதனால் கூட கோபம் வரச்செய்யும். நமக்கு வேலை நடக்கவேண்டும் என்றால் சகித்துக்கொள்ளதான் வேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மனின் சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    பொதுவாக யாருக்கும் அவ்வளவு எளிதில் எதையும் செய்யகூடாது என்று சொல்லுவார் குரு. அதற்கு காரணம் அவர்களின் கர்மா அப்படி இருக்கிறது அந்த கர்மாவை தொலைக்க அவர்கள் போராடட்டும் என்று சொல்லுவது வழக்கம். ஒரு தடவை சந்திப்பில் அனைத்தும் நடத்திவிடகூடாது என்று சொல்லுவார். 

கர்மாவின் பிடியில் இருக்கும் மக்களை காப்பாற்ற தான் சந்நியாசிகளை படைக்கிறார் கடவுள். ஆனால் அதற்கும் ஒரு விதி இருக்கிறது அநத விதிக்கு உட்பட்டு இருக்கும்பொழுது மட்டுமே சந்நியாசி செய்வார். 

ஒரு சிலர் எங்களிடம் வரும்பொழுது அவர்களை தண்ணீர் காட்டுவது வழக்கம்.  பொறுமையை கடுமையாக சோதனை செய்வதும் உண்டு. அவர்களிடம் பணம் என்பது வாங்குவது கிடையாது. பணத்தை வாங்கிவிட்டால் அவர்களுக்கு சொன்னபடி நாம் செய்துக்கொடுக்கவேண்டும் அதனால் வாங்குவது கிடையாது. விடாமல் எங்களை துரத்திக்கொண்டே இருப்பார்கள். கடைசியில் செய்து தருவது உண்டு.

யார் இழுத்த இழுப்புக்கும் நாங்கள் போககூடாது. நாங்கள் இழுக்கும் இழுப்புக்கு தான் அவர்கள் வரவேண்டும் என்பது எங்களின் கொள்கை. நீண்ட நாட்கள் வரை சம்பந்தப்பட்ட நபர் தாக்குபிடித்துவிட்டால் அவருக்கு அனைத்தும் கிடைத்துவிடும். அந்த ஊரில் அவர் தான் கிங் என்ற அளவுக்கு செய்துவிடுவது உண்டு.

நான் சோதிடர் தான் கிரகங்களை நம்புகிறவன் தான் ஆனால் செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால் இருக்கின்ற கிரகங்கள் வேடிக்கையை தான் பார்க்கவேண்டும். நான் செய்து முடித்தபிறகு தான் கிரகங்கள் வேலை செய்யும். அப்படி என்றால் எப்பேர்ப்பட்ட சக்தி இருக்கும். அது தான் அம்மன் சக்தி.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் அருள்


ணக்கம் ண்பர்களே!
                    இப்பொழுது விருச்சிக ராசியில் உள்ளவர்கள் அனைவரும் பிரச்சினையில் இருக்கின்றார்கள். அதிலும் இந்த செந்தி்ல் என்று பெயர் கொண்டவர்களுக்கு பிரச்சினை அதிகம்.

எனது நண்பர் ஒருவர் சிங்கபூரில் இருந்து போன் செய்து எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று சொன்னார். அந்த நண்பர் என்னை வந்து சந்தித்து பேசி இருக்கிறார். ஊரில் உள்ள அம்மன் கோவிலுக்கும் வந்திருக்கிறார். எங்களின் வீட்டிற்க்கும் வந்திருக்கிறார். நான் யார் என்று தெரிவதற்க்கு முன்னரே எனக்கு நிறைய செய்திருக்கிறார். நான் அணிந்திருக்கும் இருக்கும் கடிகாரம் கூட அவர் எனக்கு கொடுத்தது தான்.

அவர் என்னிடம் பேசும் பொழுது ஒரு வாரங்களுக்கு முன்பு பேசினார். சார் வேலை இல்லாமல் இருக்கின்றேன். வேலை இல்லாமல் சிங்கபூரில் எவ்வளவு நாளும் இருக்கலாம் ஆனால் வேலை இல்லாமல் இருப்பது எனக்கு கஷ்டம்போல் இருக்கிறது வீட்டிலேயே எத்தனை நாள் இருக்கின்றது என்று சொன்னார். அவர் விருச்சிக ராசி என்று சொன்னார் சரி இப்பொழுது உங்களுக்கு நேரம் சரியில்லை இருந்தாலும் பரவாயில்லை அம்மனிடம் வேண்டுதல் வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

அவர் சொல்லிமுடித்தவுடனே நான் வேலையை தொடங்கிவிட்டேன். அம்மனை நம்புகிறவர்களுக்கு பிரச்சினையா என்று நினைத்துக்கொண்டு ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் என்ன செய்யமுடியும். மறுநாள் காலையில் எனக்கு நண்பர் போன் செய்தார். சார் நன்றி வேலை கிடைத்து விட்டது என்றார். 

அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். ஏன் என்றால் எந்த ஒரு பயனும் அடைவதற்க்கு முன்பே எனக்காக நிறைய செய்தவர் அவர். அப்படி என்றால் எப்பேர்பட்ட நம்பிக்கை என் மீது அவருக்கு இருக்கும் அதனால் செய்தேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 83


வணக்கம் நண்பர்களே!
கேள்வி
Bălă Kumăressu ஐயா வணக்கம் .வியாழதிசை மற்றவர்களின் அன்பையும் ஆதரவையும் பொருளையும் எதிர்பார்க்கின்ற திசையாக இருக்கின்று அது ஏன்? உழைப்பிற்கு ஊக்கம் கொடுப்பதில்லை.
பதில்

அனைத்தும் உழைப்பு தான். எதனை வைத்து உழைக்கிறோம் என்பதில் தான் திறமை இருக்கிறது. ஒருவர் மூளையை வைத்து உழைத்தாலும் அது உழைப்பு தான். உடலை வைத்து உழைத்தாலும் அது உழைப்பு தான். ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு காரகத்தை கொண்டு உள்ளது. குரு கிரகம் உடலை உழைக்காமல் மூளை வைத்து உழைத்துக்கொள் என்று சொல்லுகிறது அதனால் மூளையை முதலீடாக வைத்து உழைக்கவேண்டும் என்று சொல்லுவார்கள்.

மற்றவர்களின் அன்பை எதிர்பார்க்காத ஆளை கிடையாது என்று தான் சொல்லவேண்டும் குரு தசா மட்டும இல்லை எல்லாம் தசாவிலும் அன்பை எதிர்பார்ப்பார்கள். மனிதனின் இயல்பு தான் அன்பை எதிர்பார்ப்பது.  அன்பை எதிர்பார்ப்பதை விட அன்பை நாம் செலுத்தமுடியுமா என்று யாரும் அவர்களை சுயபரிசோதனை செய்துக்கொள்வதில்லை.

என்னிடம் அன்பு இருந்தால் என்னை நாடி வருபவர்களும் அன்பை தருவார்கள். என்னிடம் கோபம் இருந்தால் என்னை நாடி வருபவர்களும் கோபமாக தான் இருப்பார்கள். இங்கே கொடுத்தால் தான் கிடைக்கும். கொடுக்கவில்லை என்றால் பிறரும் கொடுக்கமாட்டார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, January 30, 2014

பெரிய பாவம்


வணக்கம் நண்பர்களே!
                    பல பேர்கள் என்னிடம் பரிகாரம் செய்தும் ஒன்றும் பயன் இல்லை என்று சொல்லுவார்கள். அவர்களிடம் பலவற்றை நான் கேட்டு எப்படி செய்தீர்கள் என்ன என்ன முறையில் எல்லாம் செய்தீர்கள் என்று கேட்பது உண்டு அந்த முறை எல்லாம் சரியாக தான் செய்வார்கள் ஆனால் பரிகாரம் வேலை செய்யாமல் இருக்கும். நானும் மண்டை போட்டு உடைத்துக்கொண்டு மனதிற்க்குள் கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பேன். 

கடைசியில் தான் ஏன் வேலை செய்யவில்லை என்ற விபரம் தெரியும். அது என்ன விபரம் என்றால் பெற்ற தெய்வத்தை நட்டஆற்றில் விட்ட கதை தெரியவரும். மனைவியின் பேச்சை கேட்டு தாய் தந்தையை அப்படியே விட்டுவிட்டு வந்து விடுவார்கள். இவர்கள் பரிகாரம் செய்து நடக்கவில்லை என்று சொல்லுவதின் காரணம் என்ன என்று அப்பொழுது தான் எனக்கு புலப்பட்டது.

இப்பொழுது உள்ள பெருவாரியான குடும்பங்களில் தங்களின் பெற்றோரை விட்டுவிடுகிறார்கள். எப்படியே அவர்கள் இருந்துவிட்டு போகின்றனர் என்று விட்டுவிடுகிறார்கள். இருக்கின்ற பாவங்களில் இது தான் மிகப்பெரிய பாவம். இப்படி அவர்களை விட்டுவிட்டால் எந்த தெய்வம் தான் வரம் தரும். நான் முட்டி மோதினாலும் ஒன்றும் நடக்காது.

உங்களின் பெற்றோர்களை என்று தனியாக கஷ்டப்படவேண்டும் என்று விட்டுவிட்டீர்களோ அன்றே உங்களின் கர்மாவின் கணக்கில் பெரிய பாவம் ஏறிவிடும்.உங்களுக்கு ஏதுவும் நடக்கவில்லை என்று கோவில் குளங்கள் என்று சுற்றுவது வீணான ஒரு வேலை. என்னிடம் வரும் அனைவருக்கும் சொல்லும் முதல் செய்தி உங்களின் பெற்றோர்களை நீங்கள் விட்டுவிட்டால் தயவு செய்து என்னிடம் வராதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    இன்று ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு பேசினார் அவர் பேசும்பொழுது கும்ப லக்கின பெண்ணை எதனையும் பார்க்காமல் திருமணம் செய்துக்கொள்ளலாமே சார். அது உண்மையா என்று கேட்டார்.

ஒருவருக்கு திருமணத்தை தருவது லக்கினம் கிடையாது. அவர்களின் களத்திர ஸ்தானம் தான் முக்கியம். குமப லக்கினமாக இருந்தாலும் அவர்களின் களத்திரஸ்தானம் பாதிப்படையும்பொழுது தாலியை கழட்டி கையில் கொடுத்துவிடும். 

கும்பலக்கினம் என்பதற்க்காக விடாது. பொதுவாக பெண்களுக்கு களத்திரகாரகன் மற்றும் எட்டாவது வீட்டு அதிபதி இந்த இரண்டு வீடாவது நன்றாக இருக்கவேண்டும். இந்த இரண்டு வீட்டில் ஒரு வீடு பாதிப்படைந்தாலும் சிக்கல் வந்துவிடும். திருமணவாழ்க்கைக்கு பிறகு அவர்களின் குழந்தையைப்பற்றி தான் கேள்வி வரும். குழந்தை காட்டக்கூடிய வீடான ஐந்தாவது வீடும் முக்கியப்படுகிறது. 

ஐந்தாவது வீடு கெடும்பொழுது குழந்தைபாக்கியம் இருக்காது. வேறு கிரகங்கள் தயவு செய்தாலும் குழந்தை பிறப்பதற்க்கு காலம் சென்றுவிடும். இந்த மூன்று வீடும் நன்றாக இருந்தால் ஒரு பெண் ஒரளவாவது வாழ்ந்துவிடலாம். அதன் பிறகு தான் ஒவ்வொரு வீட்டையும் நாம் பார்க்கவேண்டும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினம் மட்டும் தான் பெரிது என்று பார்த்துக்கொண்டு திருமணத்தை நடத்தகூடாது அனைத்து வீட்டையும் நன்றாக கவனித்து திருமணத்தை நடத்தவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் தரும் வாய்ப்பு


ணக்கம் ண்பர்களே!
                    நண்பர்களிடம் பல தடவை நான் சொல்லுவது என்ன என்றால் ஆன்மீகவாதிகளை நீங்கள் சந்தித்து ஆலோசனை பெறும்பொழுது உங்களுக்கு என்ன தேவையோ அனைத்தையும் ஒரே ஆளிடம் பெற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு ஆன்மீகவாதிகளை சந்திக்காதீர்கள். அப்படி சந்திக்கும்பொழுது பல பேர்கள் உங்களுக்கு செய்யும்பொழுது நீங்கள் பிரச்சினையில் மாட்டிக்கொள்வீர்கள்.

நான் ஒரு பக்கம் செய்துக்கொண்டிருப்பேன். வேறு ஒருவர் அடுத்தபக்கம் செய்துக்கொண்டிருப்பார் கடைசியில் பிரச்சினை உங்களுக்கு வந்துவிடும். நான் இப்பொழுது வருபவர்களுக்கு எல்லாம் மிகவும் பொறுமையாக தான் செய்துக்கொண்டிருக்கிறேன். காரணம் இவர்கள் பல பேர்களை சென்று சந்தித்து வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு உடனே நாம் செய்யகூடாது என்ற காரணத்தால் அப்படி செய்கிறேன்.

என்னிடம் பொதுவாக முன்பணம் வாங்குவது என்பது கிடையாது. இலவசமாக தான் முதலில் செய்கிறேன்.இதற்கு ஆசைப்பட்டே பல நண்பர்கள் வந்துவிடுகிறார்கள். நான் செயது தருகிறேன் அதற்கு தகுந்த விலையை நீங்கள் வைக்காமல் செல்லமுடியாது. நான் கேட்பதில்லை ஆனால் உங்களிடம் இருந்து எப்படி வாங்கவேண்டும் என்று அம்மன் பார்த்துக்கொள்ளும்.

அம்மனை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். கொஞ்சம் பிரச்சினை செய்தாலும் அது பலமடங்காக உங்களை நோக்கி திரும்பி வரும். பல பேர்களுக்கு அது காட்டிக்கொண்டு இருக்கிறது. கிடைக்கின்ற வாய்ப்பை நன்றாக பயன்படுத்தினால் நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

மனித வாழ்வு


வணக்கம் நண்பர்களே!
                    மனித வாழ்க்கையை நினைத்து பார்த்தால் ஒன்றுமே இல்லை என்று தோன்றுகிறது. இன்றைய அமாவாசையில் நம் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கின்றனர் ஆனால் விரைவில் நமக்கும் இப்படி கொடுப்பார்கள் என்று நினைத்து பார்த்தால் வாழ்க்கின்ற வாழ்க்கையை நன்றாக பயன்படுத்திக்கொண்டு வாழ்வார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தான் மட்டும் பல காலங்கள் பூமியில் வாழபோகின்றனர் என்று நினைத்துக்கொண்டு அனைத்து வில்லங்கத்தை செய்கின்றனர். தான் நிற்க்கும் மண் தன்னை தின்பதற்க்கு தயாராக இருக்கின்றது என்று நினைப்பதில்லை.

நான் நிறைய பேர்களிடம் சொல்லுவேன் சார் எப்படியும் ஒரு ஆன்மீக பயிற்சியாவது செய்துக்கொள்ளுங்கள். அது உங்களை இந்த ஜென்மத்திலும் மற்றும் எதிர் ஜென்மத்திலும் காப்பாற்றும் என்று சொல்லுவேன். ஒருவரும் காதில் வாங்கிப்போட்டுக்கொள்வதில்லை. 

சும்மா வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்த்தால் இப்பொழுது பிறந்ததுபோல் இருக்கும் மரணவாயில் நின்றுக்கொண்டு இருப்பார்கள். காலம் போய்க்கொண்டு இருக்கின்றது. வீணாக இருக்காமல் ஆன்மீகத்தை உங்களுக்குள் வரவழைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

தூங்கும்பொழுதும் மூச்சு நிற்கலாம். விழித்துக்கொண்டு இருக்கும்பொழுதும் மூச்சு நிற்கலாம். மனிதவாழ்வுக்கு எந்தவித கியாரண்டியும் கிடையாது. கிடைத்த மனிதவாழ்க்கையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

காயத்ரி மந்திரப்பயிற்சி


வணக்கம் நண்பர்களே!
                    நமது ஜாதககதம்பம் வழியாக அதுவும் ஆன்மீகவழியில் சொல்லிக்கொடுக்கும் ஒரு செயல் காயத்ரி மந்திரம் மட்டுமே. நிறைய ஆன்மீக பதிவுகளை நான் எழுதினாலும் ஆன்மீக வழியில் வேறு எதுவும் சொல்லிக்கொடுப்பதில்லை.

தனக்கு தெரிந்ததை அடுத்தவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று பல மகான்கள் சொல்லுவார்கள். எனக்கு தெரிந்த ஒரு சில விசயங்களில் இந்த காயத்ரி மந்திர பயிற்சியும் ஒன்று. மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம் என்று சொல்லுவார்கள் அந்த மந்திரத்தை நீங்கள் பிறர் சொல்லி செய்தாலும் நமது ஜாதககதம்பத்தின் வழியாக செய்யும்பொழுது நமது அம்மனி்ன் ஆசி உங்களுக்கு கிடைக்கும் என்பதால் இதனை செய்யுங்கள் என்று சொல்லுகிறேன்.

பொதுவாக ஆன்மீகத்திற்க்கு என்று ஏற்ற நேரம் பிரம்மமுகூர்த்த நேரம் இந்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை எட்டுமணிக்குள் செய்துவிடவேண்டும் என்று சொல்லுவேன். காலையில் எழுந்து கடவுளை கும்பிடுவது ஒரு நல்ல செயல். எழுந்தவுடன் கடவுளை கும்பிட்டுவிட்டு வேலையை ஆரம்பித்தால் அந்த நாள் முழுவதும் நமக்கு எந்த பிரச்சினையும் ஏற்படபோவதில்லை அனைத்தையும் கடவுளே பார்த்துக்கொள்வார்.

ஒரு சிறந்த ஆன்மீகப்பயிற்சியை செய்வதற்க்கான நேரம் இப்பொழுது வருகிறது அந்த நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். வரும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ஆரம்பிக்கலாம். எப்படி செய்வது என்பதை கேட்டுக்கொள்ள எனது மொபைலை தொடர்புக்கொள்ளுங்கள்.

Cell 9551155800

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


ஆன்மீக அனுபவங்கள் 152


ணக்கம் ண்பர்களே!
                    ஒவ்வொருவரும் ஆன்மீகத்தைப்பற்றி சொல்லும்பொழுது அதனை பொதுவுடமை போல் சொல்லுவார்கள் ஆனால் எனக்கு அது சுயநலம் போல் தான் இருக்கின்றது. 

என்னுடைய தேவைக்காக தான் முதலில் இதனை எல்லாம் எடுத்தேன் அப்ப அது சுயநலம் தானே. சுயநலத்திற்க்காக எடுத்தது பொதுநலமாக மாற்றப்பட்டது. அப்பவும் அதில் இருந்து எனக்கு பணம் வருகிறது. எப்படி பார்த்தாலும் சுயநலமாக தான் இருக்கின்றது.

உங்களின் வீட்டில் சாம்பிராணி மற்றும் ஊதுவத்தி ஏற்றி வணங்கினால் அது ஒரு வசியம் போல் தான் பிரபஞ்சத்தில் இருககும் சக்தி எனக்கு நல்லதை செய்யவேண்டும் என்று உங்களின் சுயநலத்திற்க்காக கேட்கிறீர்கள் என்று அர்த்தம். அப்பொழுது உங்களின் வேண்டுதலை பொருத்து உங்களுக்கு செய்கின்றது.

ஒவ்வொரு ஆன்மீகவாதியும் சுயநலமாக தான் அனைத்தையும் எடுப்பார்கள். எடுத்தை தனக்கு வைத்துக்கொண்டு அதன் வழியாக பிறர்க்கு செய்யமுடியுமா என்று பார்த்து அதனை வைத்து பிறர்க்கு செய்வார்கள். உண்மையில் நான் எடுத்ததும் இப்படி தான் எப்படியும் நமக்கு என்ன என்ன காரியங்களுக்கு இதனை பயன்படுத்தவேண்டும் என்று திட்டம் போட்டு தயார் செய்தேன். அதில் இருந்து ஒரு சதவீதத்தை பிறர்க்கு கொடுக்கிறேன்.

உண்மையை சொல்லுவதற்க்கு எனக்கு என்றைக்கும் தயக்கம் இருந்தது கிடையாது. இன்றைக்கு இருக்கும் சக்தி கூட எனக்கு யார் உதவி செய்கின்றார்களோ அவர்களுக்கு தான் அந்த சக்தி செய்யும். பல பேர்கள் எனக்கு பணம் கொடுப்பதற்க்கு காரணமும் அது தான். என் மனதில் மகிழ்ச்சி இருந்தால் அதற்கு காரணமானவர்களுக்கு அந்த சக்தி செய்யும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பிரச்சினையும் தீர்வும் பகுதி 19


வணக்கம் நண்பர்களே!
                    நாகரீக உலகத்தில் அடுத்தவீட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரிய வாய்ப்பு இல்லை. அடுத்த வீட்டில் யார் இருந்தால் நமக்கு என்ன என்று இருந்துவிடுவார்கள். ஒரு அவசர தேவைக்கு அடுத்த வீட்டுக்காரன் தான் உதவமுடியும் என்பதை அனைவரும் மறந்துவிட்டனர்.

அடுத்த வீட்டுக்காரர்களை காட்டும் மூன்றாம் இடம் கெட்டு இருந்தால் அடுத்தவீட்டுக்காரர்களோடு சண்டை சச்சரவு ஏற்படும். கிராமங்களில் இது அதிகமாக இருக்கும். உங்கள் வீட்டு கோழி வேலியை தாண்டி வருகிறது என்று சண்டை ஆரம்பித்து கொலையில் முடியும் நிலை எல்லாம் இந்த வீடு வழியாக வரும். 

மூன்றாவது வீட்டை பொருத்தவரை கெடுதல் கிரகங்கள் இருந்தால் நல்லது என்று சொல்லுவார்கள். கெடுதல் கிரகங்கள் இருந்தால் நல்லது தான் ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் உங்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அப்படி பிரச்சினை ஏற்படாமல் இருந்தால் நல்லது.

நமது தைரியத்தை காட்டும் இடம் என்பதாலும் அந்த இடத்தில் கெடுதல் கிரகங்கள் இருப்பது நல்லது. அதே நேரத்தில் ஒன்று பக்கத்து வீட்டுக்காரன் பிரச்சினையை கிளப்புவான் அல்லது காது பிரச்சினையை கொடுக்கும்.

இதற்கு தீர்வு என்ன என்றால் நல்ல தைரியமான தெய்வங்களாக பார்த்து வணங்கி வந்தால் உங்களுக்கு ஒரளவு சமன் செய்து காலத்தை ஒட்டலாம். அப்படி இல்லை என்றால் அடிக்கடி பயணங்களை செய்து கொண்டு இருந்தால் போதுமான ஒன்று.

இந்த வீட்டை அந்தளவுக்கு பலப்படுத்த கூடாது ஏன் என்றால் இது பலப்படுத்தினால் குடும்பஸ்தானம் அடிவாங்கிவிடும்.கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, January 29, 2014

தை அமாவாசை


ணக்கம் ண்பர்களே!
                    தை அமாவாசை நாளை வருகிறது. நீங்கள் எடுக்கின்ற எந்த காரியத்திலும் தடை இல்லாமல் நடைபெறவேண்டும் என்றால் பித்ருக்களுக்கு நீங்கள் தர்பணம் செய்யவேண்டும். இதுவரை நீங்கள் செய்யாமல் இருந்தால்  நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

நான் பழைய பதிவில் நிறைய சொல்லியுள்ளேன். பித்ரு தோஷ நிவர்த்திக்கு தை அமாவாசை ஒரு நல்ல நாள்.ஒருவர் என்ன தான் கோவில் குளங்கள் என்று திரிந்தாலும் பித்ருக்கள் மனதை வைத்தால் மட்டுமே காரியம் நடைபெறும் அப்படி அவர்கள் மனதை வைக்க தை அமாவாசை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பல நண்பர்கள் என்னிடம் போனில் தொடர்புக்கொண்டு பேசினார்கள் அவர்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டேன். யாராவது தெரியாமல் இருக்ககூடும் என்பதால் இந்த பதிவை தருகிறேன்.

முடிந்தவரை புண்ணியநதிகள் என்று சொல்லக்கூடிய இடத்தில் செய்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தகுந்தார்போல் உங்களின் வீட்டிற்க்கு அருகில் உள்ள இடத்தில் செய்துக்கொள்வது நல்லது. காகத்திற்க்கு உணவை அளிப்பது சிறந்தது. பசுவிற்க்கு நீங்கள் உணவு கொடுத்தாலும் காகத்திற்க்கு செய்வது சிறப்பான ஒன்று. மற்றவை உங்களின் பழக்கத்திற்க்கு தகுந்தார்போல் செய்துக்கொள்வது நல்லது.

விரதம் இருப்பதும் சிறப்பு தான். ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருக்கலாம் ஆனால் இன்றைய காலகட்டத்தில் யாரும் அப்படி செய்வதில்லை அதனால் அனைத்திற்க்கும் முக்கியமான தை அமாவாசையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பூர்வ புண்ணியம் 67


ணக்கம் ண்பர்களே!
                    கடவுள் மீது ஏன் குறைச்சொல்லவேண்டும் அனைத்திற்க்கும் நாம் தானே காரணம் என்று என் மனது திடீர் என்று கேள்வி கேட்டது. சரி என்று எழுதிவிட்டேன். 

நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் என்னால் தான் ஏற்பட்டது. அது இந்த ஜென்மத்தில் நடந்து இருக்கலாம் அல்லது முன்ஜென்மத்தில் நடந்து இருக்கலாம். நாம் செய்கின்ற அனைத்து செயலையும் கவனிப்பதற்க்கு என்று தனி ஆட்கள் இருக்கின்றார்கள் அவர்கள் கவனித்து நமது கணக்கை எழுதிவிடுகிறார்கள். அந்த கணக்கு நம்மை தொடருகிறது.

இன்றைக்கு நாம் செய்கின்ற செயல் எப்படி இருக்கிறது என்றால் அனைத்தும் பிறர் கெடுவதுபோல் தான் உள்ளது. இதுவே மிகப்பெரிய பாவம். ஒரு பாவம் என்பது உடலால் செய்வதை விட மனதால் செய்யும் பாவம் தான் அதிகமாக இருக்கின்றது. 

நீங்களே பாருங்கள் இன்றைய பேப்பரை எடுத்தால் எங்கேயே ஒரு இடத்தில் ஒரு கொலை நடந்திருக்கலாம் அவ்வளவு தான் ஆனால் இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் பிரச்சினை மேல் பிரச்சினை ஏற்படுகிறது. அனைத்து மக்களும் என்ன கொலையா செய்திருப்பார்கள்? அல்லது கற்பழித்து இருப்பார்களா? கிடையாது அனைவரும் மனதால் செய்கின்றனர். மனதால் செய்கின்ற பாவத்தால் தான் பாவம் ஏறிக்கொண்டே இருக்கின்றது.

அதிகமாக உடலால் செய்கின்ற பாவம் என்ன என்றால் ஏதாவது ஏமாற்றுதல் இருக்கும். நண்பர்களை ஏமாற்றுதல் அல்லது காதலியை ஏமாற்றுதல் இப்படி இருக்கும். மனதால் செய்கின்ற பாவம் தான் கர்மாவில் அதிகமாக ஏறுகின்றது.

இன்றைய உலகம் போராட்டமான உலகம் என்று சொல்லுவார்கள் அது தவறு கழுத்தை அறுக்கும் உலகம். இது தான் உண்மை. ஏதாவது ஒரு விதத்தில் நாம் அடுத்தவர்களை கழுத்தை அறுத்துவிடுவோம். இன்றைய காலத்தில் குடும்பத்திற்க்குள்ளேயே கழுத்தை அறுக்கும் வேலை எல்லாம் நடைபெறுகிறது. பின்பு எப்படி கர்மா விலகும்.

பூர்வத்தில் செய்த பாவம் தொடருவதற்க்கும் விலகுவதற்க்கும் உங்களின் கையில் தான் இருக்கின்றது. பாவம் தொடரவேண்டும் என்றால் பாவத்தை செய்துக்கொண்டே இருக்கலாம். பூர்வபுண்ணியத்தில் பாவம் விலகவேண்டும் என்றால் இந்த ஜென்மத்தில் பாவத்தை குறைப்பதற்க்கு என்ன வழி என்று பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

திருவாதிரை மற்றும் சதயம்


ணக்கம் ண்பர்களே!
                    நேற்று திருவாதிரை மற்றும் சதயம் நட்சத்திரத்தை எழுதியவுடன் பல நண்பர்கள் போன் செய்து என்னிடம் சார் எங்களைப்பற்றி நிறைய தகவல்களை சொல்லுங்கள் என்று சொன்னார்கள். உங்களைப்பற்றி உங்களுக்கே தெரியவில்லையா என்று கேட்டேன்.

ஒவ்வொரு நட்சத்திரம் மற்றம் ராசியை வைத்தே அனைத்தையும் சொல்லிவிடமுடியும். என்ன செய்வது எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது எனது நேரப்பற்றாக்குறை காரணம் முடியவில்லை. சரி இவர்களுக்கு இந்த பதிவில் மேலும் பல விபரங்களை சொல்லுகிறேன் தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்த நட்சத்திரத்தை பொருத்தவரை குழந்தைகள் மாதிரி தான் இருப்பார்கள். இவர் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தான் சொல்லுவார்கள். அப்படி ஒரு அடம் இருக்கும். என்ன மாதிரி குழந்தை என்றால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாதிரி இருப்பார்கள். (special child) ஸ்பெஷல் சையில்டு என்று சொல்லுவார்கள் அல்லவா அது மாதிரி.

special child களுக்கு என்று நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எல்லாம் நான் சென்றது உண்டு. அப்படி அங்கு செல்லும்பொழுது அவர்களின் கைகளில் களிமண் உருண்டையை கொடுத்து வைப்பார்கள். அந்த குழந்தைகள் கைகள் சும்மா இருக்காது அதனை உருட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்க்காக கொடுப்பது உண்டு. 

இந்த நட்சத்திரத்தி்ல் பிறந்தவர்கள் கைகளை கவனித்தால் ஆள்காட்டி விரலை வைத்து ஏதாவது செய்துக்கொண்டிருப்பார்கள். கை சும்மா இருக்காது காரணம் மனம் சும்மா இருக்காது. மனம் ஏதாவது செய்துக்கொண்டிருக்கும்.அடுத்ததாக இவர்களின் கண்களும் சும்மா இருக்காது. யாராவது எதையாவது நம்மை செய்துவிடுவார்களோ என்று சந்தேக பார்வை பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.மனதில் ஒருவித பயம் இருந்துக்கொண்டே இருக்கும்.

நான் இருக்கும் பகுதியில் ஒரு பெரியவர் இருந்தார் அவர் திருவாதிரை நட்சத்திரம் அவரும் நானும் கோவிலுக்கு செல்லுவது உண்டு. இது நடந்தது ஐந்து வருடத்திற்க்கு முன்பு அவரோடு கோவிலுக்கு சென்று வந்தால் கண்டிப்பாக நாம் சிரிக்க வேண்டும். ஏன் என்றால் அவர் என்னிடம் ராஜேஷ் இந்த ஐயரை பாரு சும்மா ஏதோ மந்திரத்தை சொல்லுகிறான். அவன் வாயை ஒரே குத்து குத்த வேண்டும் என்பார்.

அவர் ஏதோ சொல்லிவிட்டு போகிறார் உங்களுக்கு என்ன வந்தது என்பேன். இல்லை ராஜேஷ் ஒரு நாள் பாரு என்னிடம் நன்றாக வாங்க போகிறான் என்பார். நான் அந்த நாளில் இருந்து அவரோடு கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். இதற்கு காரணம் ராகுக்கும் குருவுக்கும் ஒற்றுவராது. ராகுவோடு நட்சத்திரத்தை உடையவர்கள் ஒரு சிலர் கோவிலை இடித்தது எல்லாம் உண்டு.


இவர்களை நாம் குறைச்சொல்ல கூடாது ஏன் என்றால் படைத்த இறைவனின் செயல் அது. இவர்களை குழந்தைகள் போல் சொல்லி சொல்லி தான் திருத்தவேண்டும். இவர்களுக்கு கொடுக்கவேண்டியது நல்ல ஆலோசனை மற்றும் ஆன்மீகசக்திகள் வைத்து இவர்களை முன்னேற்றம் அடைய வைக்கவேண்டும். 

கோபத்தை குறைக்க வழி செய்யவேண்டும். என்னிடம் எத்தனையோ பேர் இந்த நட்சத்திரத்தை உடையவர்கள் வந்து ஆலோசனை செய்துவிட்டு சென்று இருக்கிறார்கள். அவர்களை வைத்து பார்க்கும்பொழுது அவர்களால் இந்த சமுதாயத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றே தெரிகிறது. சமுதாயத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றால் என்ன பைத்தியம் தான். இவர்களால் வளைந்து கொடுத்து செல்லமுடியவில்லை.

இவர்களை பற்றி கடைசியாக ஒன்று சொல்லுகிறேன். இவர்கள் தூய்மையான அன்புக்கு ஏங்குகிறார்கள். அதனாலே இவர்கள் காதலில் விழுகிறார்கள். அந்த காதல் இவர்களுக்கு தூய்மையான அன்பு தருகிறதா என்றால் விதி இவர்களை காதலில் தோல்வி அடைய செய்கின்றது. ஒரு குழந்தை போல் கவனிக்கபடவேண்டியவர்கள் இவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர்களின் மீது அன்பை நீங்கள் வைத்தால் இவர்களை விதியின் பிடியில் இருந்து தப்பிக்க வைக்கலாம்.

மேலே சொன்ன அனைத்து தகவலும் எனது சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்த தகவல்கள். ஒருவர் வந்தால் அவரின் உடலை வைத்தே நாம் கணிக்கும் ஆற்றலை பெற்று இருக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே அவர்களுக்கு அனைத்து தீர்வையும் நாம் தரமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 82


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு தசாவில் ராகு புத்தியைப்பற்றி பார்க்கலாம்.

குருவிற்க்கும் ராகுவிற்க்கும் எப்பொழுதுமே பிரச்சினை தான் இருந்தாலும் ஒரு சிலருக்கு நல்லதை செய்யும். குருவும் ராகுவும் சேர்ந்து பலனை தரவேண்டும். இரண்டு கிரகங்களும் நல்ல நிலையில் இருந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். இரண்டில் ஒன்று கெட்டாலும் நல்ல பலனை நாம் எதிர்பார்க்கமுடியாது.

குரு ஆன்மீகத்திற்க்கு உரிய கிரகமாக இருப்பதால் ராகுவும் ஒரு சில நேரங்களில் அதிகமான பக்தியை தரும் கிரகம் தான் அதனால் நல்ல ஆன்மீகவிசயங்களிலும் நாட்டம் செல்லவைக்கும்.

குரு தசா ராகு புத்தியின் காலம்

அந்தரநாதர்கள்

ராகு   4 மாதம் 8 நாள் 
குரு   3 மாதம் 25 நாள்
சனி   4 மாதம் 16 நாள்
புதன்   4 மாதம் 2 நாள்
கேது  1 மாதம் 20 நாள்
சுக்கிரன் 4 மாதம் 24 நாள்
சூரியன் 1 மாதம் 13 நாள்
சந்திரன் 2 மாதம் 12 நாள்
செவ்வாய் 1 மாதம் 20 நாள்

கொஞ்ச அதிக நாள் தான் இருந்தாலும் ஒரு சில நன்மையும் செய்யாமல் விடாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 151


வணக்கம் நண்பர்களே!
                    கும்பிட்ட கும்பிட்டு என்ன கண்டோம் சாமியை கும்பிடாமலேயே இருந்துவிடலாம் என்று சொல்லுவார்கள் இதனைப்பற்றி சொல்லுங்கள் என்று ஒரு நண்பர் கேள்வி அனுப்பி இருந்தார் அவருக்காக இந்த பதிவு.

கும்பிட்டு கும்பிட்டு என்ன கண்டோம் என்று சொல்லும் வார்த்தை எல்லாம் நீங்கள் சென்ற வழி தவறாக இருக்ககூடும். நேற்று ஒரு பதிவில் சொல்லிருந்தேன் உங்களுக்குள் தேடாமல் உங்களால் முழுமை பெறமுடியாது என்றேன்.

கோவிலில் மட்டும் தேடிக்கொண்டிருந்தால் என்ன செய்யமுடியும் உங்களுக்குள்ளேயும் தேடவேண்டும். முதல் நிலையில் இருப்பவர்கள் கோவிலுக்கு சென்று கும்பிடலாம். கும்பிட்டு பிறகு உங்களுக்குள் தேடும்பொழுது இறைவன் உங்களுக்கு கேட்டதை தருகிறான்.

ஊரில் ஆன்மீகவாதிகள் போல் வேஷம் போட்டு திரியலாம் பார்க்கிறவர்கள் அனைவரும் ஆன்மீகவாதியாக இருக்கிறான் அவனுக்கு ஆயிரதெட்டு பிரச்சினை என்று கேலிசெய்வார்கள். அவன் வேஷம் போட்டு அவனுக்குள்ள பிரச்சினையே தீர்க்கமுடியவில்லை என்றால் அவன் உண்மையான இறைவனை நாடமுடியவில்லை என்று தான் அர்த்தம்.

நான் கும்பிடும்பொழுது எனது மனநிலை எப்படி இருந்தது என்றால் கண்டிப்பாக எடுத்தே ஆகவேண்டும் அதை விட்டால் வேறு வழி இல்லை என்று தான் இருந்தேன். நீங்கள் என்ன செய்வீர்கள் முதலிலேயே அதனைப்பற்றி அவநம்பிக்கை கொண்டுவிடுவீர்கள். வைக்கின்ற நம்பிக்கையில் தான் அனைத்தும் இருக்கின்றது.

கும்பிடுவது மட்டும் இல்லாமல் உள்முகமாக திரும்பினால் கிடைததுவிடும் அப்புறம் யாரையும் நாடிச்செல்லவேண்டியதில்லை. கும்பிடவும் வேண்டும் அதேப்போல் உள்முகமாகவும் திரும்பவும் வேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

எங்கே சென்றேன்?


ணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் இரண்டு நாட்களாக என்னிடம் சார் நீங்கள் எங்கு சென்றாலும் பதிவில் சொல்லிவிட்டு தான் செல்லுவீர்கள் திடீர் என்று சொல்லாமல் சென்று வந்திருக்கிறீர்களே என்று கேட்டார்கள்.

சொந்த வேலை என்று சொன்னாலும் அது நமது நண்பர்களுக்கு செய்யும் வேலையாக தான் இருக்கின்றது. பல இளைஞர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார் அவர்களுக்கு உதவவேண்டும் என்பதற்க்காக ஒரு சில ஊர்களுக்கு சென்று அவர்களுக்கு ஆன்மீகவழியில் உதவிக்கொண்டிருக்கிறேன். இந்த நண்பர்கள் அனைவரும் ஜாதககதம்பம் வழியாக வந்தவர்கள்.

பல இளைஞர்கள் வாழ்க்கையில் சின்ன தவறு செய்துவிட்டு கஷ்டப்படுகிறார்கள் அவர்களை போட்டு இந்த உலகம் கஷ்டப்படுத்துகிறது. அவர்களின் விதி அப்படி செய்திருக்கிறார்கள் யாரும் வேண்டும் என்றே செய்வது கிடையாது.

அப்படிப்பட்ட இளைஞர்கள் நமது ஜாதககதம்பத்தை படிக்கிறார்கள் நேராக வந்துவிடுகிறார்கள். வேறு வழி அவர்களுக்கு கிடையாது அதனால் அவர்களுக்கு தேவையான உதவியை செய்துக்கொடுக்கிறேன். ஆன்மீகவழியில் மட்டும் தான் செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இப்படி செய்யும்பொழுது நேரடியாக நான் வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி கூப்பிடுகிறார்கள் அதனால் சென்று வருகிறேன்.

இப்பொழுது அவர்களுக்கு நான் எந்தவித உதவியையும் எதிர்பார்த்து நான் செய்வது கிடையாது. அவர்கள் எங்களை காப்பாற்றினால் உங்களுக்கு தேவையானதை நான் செய்து தருகிறேன் என்று சொல்லுகிறார்கள். சரி என்று நான் சொல்லிவிட்டு செய்து கொடுக்கிறேன்.

இந்த மாதத்தில் ஏகாப்பட்ட இளைஞர்கள் என்னை தேடி வந்திருக்கின்றனர் அவர்களுக்கு நான் செய்துக்கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த உதவியை வழங்க அவர்களை தேடிச்செல்லுகிறேன்.அந்தந்த ஊர்களுக்கு செல்லும்பொழுது நமது நண்பர்களை போனில் தொடர்புக்கொண்டு அவர்களையும் சந்திக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, January 28, 2014

திருவோணம்


வணக்கம் நண்பர்களே!
                                       திருவோணம் நட்சத்திரம் என்பது இருக்கும் நட்சத்திரத்திலேயே மிகவும் நல்ல நட்சத்திரம் என்றே நான் சொல்லுவேன். இது பெருமாளின் நட்சத்திரம் என்று சொன்னாலும் திருவோணத்தில் ஆரம்பிக்கும் எந்த ஒரு காரியமும் தோற்காது என்பதால் சொல்லுவது உண்டு.

பொதுவாக எந்த ஒரு நல்ல காரியமும் தொடங்குவதற்க்கு வளர்பிறையாக பார்த்து நாம் செய்வோம் ஆனால் ஒரு மாதத்தில் வளர்பிறையில் திருவோணம் நட்சத்திரம் வராமல் தேய்பிறையில் திருவோண நட்சத்திரம் வந்தாலும் அந்த நாளில் நீங்கள் தொடங்கினால் மிகவும் நல்லமுறையில் அந்த காரியம் நடைபெறும்.

என்னிடம் சோதிட ஆலோசனை கேட்டு தொழில் தொடங்குபவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் பொழுது நீங்கள் வியாபாரம் தொடங்குவது திருவோணம் நட்சத்திரமாக பார்த்து தொடங்குங்கள் என்று சொல்லுவது உண்டு. நான் சொன்னதை ஏற்று இன்று தொழில் தொடங்கிய அனைவரும் நல்லமுறையில் இருக்கின்றனர் அதற்கு காரணம் திருவோணம் என்ற நட்சத்திரம் தான்.

நீங்கள் உங்களின் நல்ல காரியத்திற்க்கு இந்த நட்சத்திரத்தை பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடையுங்கள்.நீங்கள் தொடங்கிபாருங்கள் இந்த நாளில் தொடங்கியதால் பொன்னான காரியமாக அது உங்களுக்கு அமையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பிரச்சினையும் தீர்வும் பகுதி 18


வணக்கம் நண்பர்களே!
                    மூன்றாவது வீட்டில் ராகு கேது இருந்தால் அது பித்ரு தோஷம் என்று சொல்லுகிறார்கள். மரணத்திற்க்கு ஒப்பான நிகழ்வு போல தான் இது இருக்கும். ஒரு செயலை ஆரம்பிக்கும்பொழுது தடை ஏற்பட்டால் அது நமக்கு பிரச்சினை இல்லை ஆரம்பித்தோம் பிரச்சினை வந்தது விட்டுவிட்டோம் என்று சொல்லிவிட்டு போய்விடுவோம் ஆனால் கடைசியில் முடியும் தருவாயில் அது தடைப்பட்டால் எப்படிப்பட்ட வெறுப்பு நமக்கு வரும் என்னடா இப்படி சென்றுவிட்டதே என்று தோன்றும். சிகரத்தின் உச்சியை தொடும்பொழுது கீழே தள்ளிவிட்டால் எப்படி இருக்கும்.

ஒரு நிகழ்வில் முடிந்தால் பிரச்சினை இல்லை எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நடைபெறும்பொழுது தான் நமக்கு மிகப்பெரிய வெறுப்பு நமது வாழ்க்கையில் வருகிறது.மூன்றாவது வீடு ஆயுளை காட்டினாலும் மரணத்திற்க்கு ஒப்பான ஒரு நிலையை ஏற்படுத்துகிறது என்று தான் சொல்லவேண்டும். இவர்கள் அடிப்பட்டு அடிப்பட்டு அட போடா வாழ்க்கை இது தான் என்று நினைக்கதோன்ற வைப்பதில் கில்லாடிகள் ராகு கேதுக்கள்.

இது ஏற்பட்டதற்க்கு காரணம் நம்மை அப்படி ஒரு தாக்குதலை நடத்துகிறது ஆத்மாவாகவும் இருக்கலாம் அல்லது முன்ஜென்மத்தில் நாம் செய்த கர்மாவாகவும் இருக்கலாம். இரண்டும் ஒன்று தான். 

ஒரு வழி நமது முன்னோர்கள் வழியில் எங்கு தவறு நடந்திருக்கிறது என்று பார்த்து அவர்களை கேட்டு சம்பந்தப்பட்ட நபர்களின் வாரிசுகள் இருந்தால் அவர்களுக்கு உதவலாம் அலலது இராமேஷ்வரம் அல்லது திருப்புல்லாணி போன்ற இடங்களுக்கு சென்று பித்ரு காரியங்களில் ஈடுபடலாம். 

இந்த பிரச்சினைக்கு நீங்கள் வழி செய்யவில்லை என்றால் உங்களின் வாழ்வில் பல சோதனைகளை கண்டு நொந்துவிடுவீர்கள்.வாழ்ந்த வாழ்வு ஒரு நொந்தவாழ்வாக மரணத்தைபோல் இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சளி என்ற சனி


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு தகவலைப்பற்றி பார்க்கலாம். பொதுவாக இறப்பிற்க்கு சனி காரத்துவம் வகிக்கிறார். சனிக்கிரகம் குளிர்ச்சியான கிரகம் என்பதால் வயதான பிறகு இறப்பவர்களுக்கு சளி தொந்தரவு இருக்கும். அதிகமான சளி தொந்தரவாலேயே அவர்கள் இறப்பதும் உண்டு.

ஒரு சில கிராமங்களில் பார்த்தால் அவர்களின் வீட்டில் உள்ள மூதாட்டிகளுக்கு அவர்கள் தெரியாமல் எண்ணை தேய்த்து குளிப்பாட்டி விட்டுவிடுவார்கள் அது என்ன என்றால் சளிபிடித்து அதனாலேயே இறப்பதும் உண்டு. அதனை சனி பிறந்துவிட்டது என்பார்கள். நம்ம ஆளுங்க எப்படிப்பட்ட கில்லாடிகள் எண்ணையும் தேய்த்துவிட்டு கூடுதலாக இளநீரையும் கொடுத்துவிடுவார்கள்.உடனே அவர்களுக்கு பிரச்சினையாகி இறப்பதும் உண்டு.

நான் சொல்லுவது எல்லாம் அவர்களுக்கு தெரியாமல் செய்துவிடுகிறார்கள். பல கிராமங்களில் இருந்து நமது பதிவை படிக்கும் நண்பர்கள் இருக்கின்றனர் அவர்கள் இப்படி செய்யாமல் இருக்கட்டும் என்றும் தான் இதனை சொல்லுகிறேன்.

சளிக்கும் மரணத்திற்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. சளியை நாம் சனி என்றே சொல்லலாம். உங்களின் ஊரில் யாராது உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவர்களை பார்த்தால் அவர்கள் கடைசி நேரத்தில் சளி தான் இழுத்துக்கொண்டிருக்கும்.சளி இழுப்பது தான் சத்தமாக இருக்கும்.

மரணத்தைப்பற்றி பல விசயங்கள் இருந்தாலும் இந்த சளி என்ற சனியின் தொல்லை அதிகமாக இருக்கும்.மரணத்தைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் எல்லாம் செய்தது உண்டு அதனை எல்லாம் அவ்வப்பொழுது உங்களுக்கு தருகிறேன். ஏன் என்றால் எல்லாவற்றையும் கொட்டினால் நீங்கள் பயந்துவிடுவீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

திருவாதிரை மற்றும் சதயம்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று ஒரு நண்பர் என்னை வந்து சந்தித்து பேசினார். அவர் பேசும்பொழுது பல விசயங்களில் அவர் நல்ல அறிவை பெற்று இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. பெரும்பாலும் அவர் நுழையாத ஒரு துறையே இல்லை என்ற அளவுக்கு பேசினார். 

மனநலத்தைப்பற்றி எல்லாம் பேசினார். அவர் சந்திக்காத ஆட்களை கிடையாது என்று நினைக்கிறேன் அந்தளவு அவரின் பேச்சு இருந்தது. கடைசியில் அவரிடம் நான் சார் உங்களின் நட்சத்திரம் என்ன என்று கேட்டேன். அவர் சதயம் நட்சத்திரம் என்று சொன்னார்.

அவரிடம் உங்களுக்கு தெரிய ஒரு விசயமும் கிடையாது அதே நேரத்தில் உங்களுக்கு இரவில் நீங்கள் தூங்கவே முடியாதே என்று சொன்னேன். அவர் எப்படி சார் கண்டுபிடித்தீர்கள் என்று சொன்னார்.

நான் சொல்ல ஆரம்பித்தேன். திருவாதிரை மற்றும் சதயம் நட்சத்திரத்தை உடையவர்கள் கண்டிப்பாக இரவு நேரங்களில் அவர்கள் தூங்குவது என்பது மிகவும் ஒரு கடினம். அவர்களுக்கு அனைத்து திறமையும் கொடுத்த ஆண்டவன் இப்படி ஒரு குறையை வைத்திருப்பது பொதுவாக யாருக்கும் தெரியாது.

என்னிடம் நிறைய நண்பர்கள் இப்படி வந்திருக்கின்றனர். அவர்கள் என்னிடம் சார் மண்டைக்குள் ஏதோ ஒன்று ஒடுவது போல் தெரிகிறது என்று சொல்லுவார்கள். நான் அவர்களிடம் ஏன் தேவையற்ற கற்பனைகளை செய்துக்கொள்கிறீர்கள் என்று கேட்பது உண்டு. இதில் இன்னும் ஒரு படி மேலே போய் வீட்டை விட்டு ஒடுவார்கள். அதுவும் பெளர்ணமி மற்றும் அமாவாசையின் இரவில் இவர்களின் மனம் படும்பாடு மிகவும் கொடுமையாக இருக்கும்.இந்த ஒரு காரணத்தால் இவர்களின் உடல்நிலை மிகவும் பாதிப்படைய செய்யும்.

இவர் என்னிடம் வந்ததின் நோக்கம் தொழிலை வளர்ச்சி அடைய உதவுங்கள் என்று கேட்டு வந்தார் அவருக்கு அவரைப்பற்றி சொன்னவுடன் அவர் முதலில் இதனை எனக்கு சரிசெய்துக்கொடுங்கள் என்று கேட்டார். இந்த இரண்டு நட்சத்திரத்தைப்பற்றி பல காலங்களுக்கு முன்பே நான் தீவிர சிந்தனை செய்து இவர்களுக்கு உதவவேண்டும் என்று எண்ணி பல விசயங்களை செய்து பார்த்தது உண்டு.

பொதுவாக மனநல நிபுணர்களிடம் சென்று இவர்களை காட்டினால் இவர்களைப்பற்றி கண்டுபிடிக்கமுடியாது. இவர்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்று கூட தெரியாது ஆனால் இவர்களுக்கு நோய் இருக்கும். நான் பல பேர்களிடம் சவால் செய்தது உண்டு. மருத்துவதுறையில் இவர்களை கண்டுபிடித்து விட்டால் நான் இந்த தொழிலையே விட்டுவிட்டு சென்றுவிடுகிறேன் என்று எல்லாம் சொல்லுவது உண்டு.

இந்த இரண்டு நட்சத்திரத்தை பற்றி பழைய பதிவில் எழுதி உள்ளேன். நேற்று ஒருவரை சந்தித்ததால் எழுதுகிறேன். பொதுவாக இது ஆன்மீகத்தில் மிகவும் கஷ்டப்பட்டு சரி செய்ய வேணடிய ஒன்று. மருத்துவத்தால் இதனை சரிசெய்யமுடியாது. ஏன் என்றால் மருத்துவதால் கண்டுபிடிக்கமுடியாத ஒரு வியாதி இது அப்புறம் எப்படி சரி செய்யமுடியும். ஆன்மீகத்தால் மட்டுமே சரிசெய்யகூடிய ஒரு செயல் இது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நான் பூஜை செய்யும்பொழுது எக்காரணம் கொண்டும் கற்பூரம் ஏற்றமாட்டேன். அப்படி கற்பூரம் ஏற்றுவதற்க்கு எனறு ஒரு சில விதிகள் உள்ளது அப்பொழுது தான் ஏற்றுவது உண்டு. ஏன கற்பூரம் ஏற்றக்கூடாத என்று கேட்கதோன்றும் கற்பூரத்தை ஏற்றினால் அம்மன் மிகவும் ஆக்கோரஷமாக தாக்க ஆரம்பிக்கும் அதனால் ஏற்றுவதில்லை.

பொதுவாக எந்த காரியத்திற்க்கும் சாந்தப்படுத்தி அம்மனை அனுப்பி வைப்பது தான் எனது வேலையாக இருக்கும். ஏன் என்றால் கொஞ்சம் பிரச்சினை என்றாலும் சம்பந்தப்பட்ட நபரை தாக்கிவிடும் என்பதால் அப்படி செய்வது உண்டு.

கோவில்களில் ஆடு ,கோழி பலி கொடுத்தாலும் நான் அந்த இடத்தில் நிற்பது கிடையாது காரணம் என்ன என்றால் நம்மிடம் இருக்கும் அம்மன் அதனை ஏற்க ஆரம்பித்துவிடும் என்பதால் அப்படி செய்வது கிடையாது. இரத்தத்தை கண்டுவிட்டால் அவ்வளவு தான் மறுபடி மறுபடி கேட்க ஆரம்பிக்கும். நம்ம பிழைப்பு அவ்வளவு தான்.

அம்மனுக்கு பொதுவாக கோவில்களில் கொடுப்பதை தவிர வேறு எதுவும் நான் கொடுப்பதில்லை. ஏன் என்றால் அது மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடும். இரத்தம் கொடுத்துவிட்டு இரத்தம் இல்லை என்றால் என் இரத்தத்தை எடுக்க ஆரம்பித்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 150


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் என்னிடம் பேசும்பொழுது கேட்டார் இவ்வளவு செய்கிறீர்களே அது எல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது என்று கேட்டார். அவருக்கு நான் சொன்னது.

                   ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

சுவாமி விவேகானந்தர்.

இந்த வாக்கியத்தை தான் மேற்கோள் காட்டி சொன்னேன். நமது ஆத்மாவை பற்றி தெரியாதை வரை நமக்குள்ளே எதுவும் நடைபெறாது.பொதுவாக தன்னை உணரவேண்டும் அப்பொழுது தான் தெய்வீகம் என்றால் என்ன என்று தெரியவரும்.

ஆத்மாவின் பலம் தான் அனைத்தும் நடைபெறும் அந்த ஆத்மாவை பலப்படுத்தினால் உங்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடும்.ஆத்மாவை பலப்படுத்துவது எப்படி என்று கேட்கிறீர்களாக விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்திருக்கவேண்டும்.

பல பேர் சொல்லுவது தெரிகிறது. அப்ப நாம் பலப்படுத்தமுடியாது என்று தெரிகிறது.என்று சொல்லுவது புரிகிறது. முதல் தகுதியே நீங்கள் விடியற்காலை நான்கு மணிக்கு எழுவது மட்டுமே. அப்படி எழுந்துவிட்டீர்கள் என்றால் ஆத்மா அதுவாகவே பலப்படுத்திக்கொள்ளும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    அம்மன் என்றால் சும்மா ஏதோ இவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று நினைக்க கூடாது. கை மேல் பலனை கொடுக்ககூடிய ஒரு தெய்வம் நமது அம்மன். எத்தனையோ ஆன்மீகவாதிகள் கண்டு ஆச்சரியப்படும் செயலை செய்யகூடியது நமது அம்மன்.

அப்பேர்ப்பட்ட அம்மனை தான் நான் தினமும் துதித்துக்கொண்டு இருக்கிறேன். எத்தனையோ பாரங்களை மனதில் சுமந்துக்கொண்டு இருப்பவர்கள் என்னோடு சந்தித்துபேசும்பொழுது அவர்களின் மனது சுமையை இறக்கி  தருபவது அம்மன்.

என்னிடம் பிறர் உதவி கேட்டு வரும்பொழுது நான் பெரிய பூஜை எல்லாம் செய்துக்கொண்டு இருப்பது இல்லை. சும்மா அம்மனை நினைத்தால் போதும் அம்மன் நடத்திக்கொடுத்துவிடும்.

என்ன மேஜிக்கா என்று நினைக்க தோன்றும் ஆனால் அது தான் உண்மை. சும்மா நான் நினைத்தால் போதும் அது தானாகவே நடந்துமுடிந்துவிடும். அப்படி என்றால் எப்பர்ப்பட்ட ஆற்றலை உடையது என்பதை நீங்களே நினைத்து பாருங்கள்.

எத்தனையோ பிரச்சினைகளை நான் கண்டு கவலைப்படுவதில்லை காரணம் அம்மன் நாம் சொன்னால் நடத்திக்கொடுக்கும் என்ற நம்பிக்கை மட்டும் தான் என்னிடம் உள்ளது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பிரச்சினையும் தீர்வும் பகுதி 17


ணக்கம் ண்பர்களே!
                    இன்றைய காலத்தில் பிராமணர்களுக்கு ஏற்படும் தோஷம் போல வேறு சாதியில் உள்ளவர்களுக்கு ஏற்படுவது இல்லை என்ற தான் எனக்கு தோன்றுகிறது. எனக்கு குரு தசா நடப்பதால் என்னவோ தெரியவில்லை என்னை நாடிவருபவர்கள் அதிகம் பேர் பிராமணர்களாக இருக்கின்றனர். 

இன்று கூட ஒரு ஐயா அவர்கள் வந்திருந்தார் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் கடுமையான பித்ரு தோஷம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களில் மொத்தம் அந்த ஐயாவோடு சேர்த்து ஆறு பேர். ஆறு பேரில் மூன்று பேருக்கு திருமணம் நடைபெறவில்லை. ஒருவர் இறந்துவிட்டார். ஐயாவின் மகன்களுக்கும் திருமணம் நடைபெற்று ஒருவர் விவாகாரத்து வாங்கிவிட்டார் ஒருவர் திருமணம் செய்து குழந்தை பாக்கியம் இல்லை. 

அவரிடம் உங்களின் முன்னோர்கள் செய்த பாவம் என்ன என்று கேட்டேன். அப்பொழுது தான் சொன்னார். ஒரு பெண் தீ கொளுத்திக்கொண்டு எங்களின் தாத்தாவால் இறந்துவிட்டது என்று சொன்னார். இன்னும் பல காரணங்கள் சொல்லிருந்தார்.

ஒருவர் எப்படி இறக்கவேண்டும் என்பதைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருகிறேன். ஒருவர் தீயால் இறந்தால் அவரின் ஆத்மா கோரமாக மாறிவிடும். அது பலிவாங்காமல் இருக்காது.

தற்கொலை செய்யும்பொழுது கூட கடைசியில் எப்படியாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று போராடும் அதனாலே அது கோரமாக மாறுவது உண்டு.அப்படிப்பட்ட ஆத்மா என்ன செய்யும் என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களை பலிவாங்கிக்கொண்டே இருக்கும். வீட்டில் உள்ளவர்களின் ஆத்மாவோடு அது இருக்க ஆரம்பிக்கும். அப்பொழுது பிரச்சினை மேல் பிரச்சினையை வாங்கவேண்டிவரும்.

இப்படிப்பட்ட ஆத்மா உங்களோடு இருக்கும்பொழுது உங்களுக்கு பிரச்சினை மேல் பிரச்சினை மட்டுமே. நீங்கள் என்ன தான் செய்தாலும் அதில் இருந்து தப்பிக்கமுடியாது. ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் பித்ருதோஷமாக அதனை காட்டும். அப்பொழுது அதற்கு தகுந்த பரிகாரம் செய்யவேண்டும்.

உங்களின் ஊரில் உள்ளவர்களை தொடர்புக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் பரிகாரம் செய்துக்கொள்வது நல்லது. அதன் பிறகு உங்களின் பிரச்சினையை சரிசெய்துக்கொள்ளலாம்.அந்த ஆத்மாவை சாந்தப்படுத்தாமல் நீங்கள் என்ன தான் சாமி கும்பிட்டாலும் உங்களால் கடவுளின் அருளை பெறமுடியாது.

ஒரு சில பேர் இதற்க்காக இருக்கின்றனர். ஆத்மாவை சாந்தப்படுத்தும் வேலையில் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள் அவர்களிடம் நீங்கள் அணுகும்பொழுது தகுந்த பரிகாரத்தை செய்து தருவார்கள். உங்களுக்கு மற்றும் எதிர்கால சந்ததினரும் பயன்பெறும் வகையில் செய்துககொண்டுவிடுவது நல்லது. என்ன தான் பணம் தான் முக்கியம் என்று நீங்கள் கருதினாலும் உங்களின் சந்ததியும் முக்கியம் அல்லவா தகுந்த பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 81


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு தசாவில் ஒரு பொதுதகவலை பார்க்கலாம்.

குரு தசாவில் ஒருவருக்கு பங்கு சந்தையின் மீது அதிக ஈடுபாட்டை தரும். பங்கு சந்தையில் முதலீடு செய்யவேண்டும் என்று தோன்ற வைக்கும். நீங்களே இதனை சோதித்து பார்க்கலாம். குரு தசா நடந்தால் கண்டிப்பாக அவர்கள் பங்குசந்தையைப்பற்றி சிறிய அறிவாவது அவர்களுக்கு இருக்கும். ஏதாவது ஒரு பங்கு வணிகத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.

பங்கு சந்தையில் வெற்றி பெறுகிறார்களா அல்லது தோல்வி அடைவார்களாக என்பது என்பதைப்பற்றி கவலைப்படாமல் பங்கு சந்தைக்கு சென்று இருப்பார்கள்.குரு கிரகம் நன்றாக இருக்கும்பொழுது அவர்கள் பங்குசந்தையில் வெற்றி பெற்று இருப்பார்கள். குரு கிரகம் கெடும்பொழுது பங்குசந்தை வணிகத்தில் சென்று தோல்வி அடைந்திருப்பார்கள்.

பூர்வபுண்ணியத்தை குறிக்கும் கிரகம் குரு கிரகம் என்பதால் எளிதில் வெற்றி பெறுவதற்க்கு வாய்ப்பு உண்டு அதே நேரத்தில் ஐந்தாவது வீட்டு அதிபதி துணை புரியவேண்டும். இதனையே தொழிலாக செய்வதற்க்கு பத்தாவது வீட்டு அதிபதியும் துணை புரியவேண்டும்.

குரு தசாவில் ஒருவர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும்பொழுது கொஞ்சம் அமைதியான இடத்தில் அமர்ந்துக்கொண்டு தினமும் சிறிய நேரம் தியானம் செய்துவிட்டு பங்குவர்த்தகத்தில் ஈடுபடும்பொழுது அவர்களால் எளிதில் வெற்றிபெறமுடியும். பங்குவர்த்தகத்திற்க்கு நல்ல மூளை வேண்டும் அதனை குரு தசா உங்களுக்கு கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.