Followers

Saturday, January 18, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 13


வணக்கம் நண்பர்களே!
                    சந்திராஷ்டமத்தை வைத்து பதிவை எழுதியவுடன் நண்பர்கள் சிலர் தொடர்புக்கொண்டு என்னிடம் பேசினார்கள். அவர்களின் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்கள். அனைவருக்கும் நன்றி. உடனுக்கு உடன் பதிவு நண்பர்களை சென்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

ஒருவருக்கு சந்திரன் நன்றாக இருந்தாலும் கெட்டு இருந்தாலும் சந்திரன வேலை செய்யாமல் மட்டும் இருக்கவே இருக்காது கண்டிப்பாக வேலை செய்யும். பொதுவாக கிரகங்கள் அதிகமாக தன் வேலையை நடத்திக்கொள்வதும் இந்த சந்திரனை வைத்து மட்டுமே. மனக்காரகன் நன்றாக இருக்கும்பொழுது மட்டுமே நாம் நன்றாக வாழமுடியும்.

உங்களின் வாழ்க்கையில் ஒரு வருடத்தை எடுத்து பார்த்தால் நீங்கள் அதிகம் பிரச்சினையை சந்தித்தது சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும் நாள் மற்றும் சந்திரன் உங்களின் ராசியை கடக்கும் நாளாக இருக்கும். இது பொதுவான தகவல் மட்டுமே.உங்களின் ஜாதகத்தை வைத்து அதனை பார்க்கவேண்டும். 

இரவில் பலம் அதிகமாக தான் சந்திரன் காணப்படும். சனி, ராகு, கேதுவின் நட்சத்திரங்களை உடையவர்கள் இரவில் தூங்குவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். மனதை போட்டு அல்லல்படுத்துவிடும்.மனது நன்றாக இருந்தால் தானே ஒருவர் நன்றாக இருக்கமுடியும்.

என்னிடம் தொழில்வழியாக தொடர்புக்கொண்டவர்களுக்கு முதலில் நான் செய்யும் வேலை அம்மனை வைத்து செய்யும்பொழுது சந்திரனை பிடித்து முதலில் அம்மன் தன் வேலையை காட்டும். ஒருவருக்கு தொழில் செய்யவேண்டும் என்றால் அவர்களின் மனது நல்ல தைரியத்தோடு இருக்கவேண்டும அதனால் அப்படி செய்வது உண்டு. இதுவரை அவர்களுக்கு இருந்து வந்த மனதின் பயம் குறையும். இரவில் நல்ல தூக்கத்தை கொடுக்கும். இதனை எல்லாம் நான் செய்வது சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாது ஆனால் அவர்கள் நன்றாக இருப்பார்கள்.

மனதிற்க்கு நாம் முதலில் செய்துவிட்டால் பிறகு ஒவ்வொன்றையும் செய்வது சுலபம். மனதுக்காரகன் என்று அழைக்கப்படும் சந்திரனை முதலில் சரிசெய்யுங்கள்.பிறகு உங்களின் ஜாதகத்தில் ஒவ்வொன்றையும் சரிசெய்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: